Friday, December 7, 2007

இளையராஜாவும் நானும்

அனைவரும் நலமா? முதலில் வணக்கம் வைத்தாகி விட்டது. அடுத்து என்ன எழுத? கடவுளைப் பற்றி எழுதலாம் என்றால் நமக்கோ நம்பிக்கை இல்லை. எதையாவது எழுதி வீணாக அடி வாங்குவானேன்? எனவே, இசைக் கடவுளைப் பற்றி எழுதலாம் என்றுள்ளேன்.

10ம் வகுப்பு வரை அனைத்து பாடல்களையும் சும்மா கேட்டுக்கொண்டிருப்பேன். அனுபவித்தேனே தவிர ஆராயவில்லை. அப்போது வீட்டில் வெறும் ரேடியோ மட்டும்தான். திருச்சி மற்றும் இலங்கை நிலையங்கள் கேட்பேன். 11ம் வகுப்பு படிக்கும்போது சிங்கபூரிலிருந்த உறவினர் 'Philips 2 in 1' கொடுத்தார். அதற்கு பிறகுதான் ஒலி நாடாக்கள் வாங்க ஆரம்பித்தேன். வீட்டில் கொடுக்கும் பணத்தில் எல்லாம் வாங்க முடியாது. என் நண்பன் (பெரியம்மா பையன். 3 வயது பெரியவன்) 'மோகன் ஹிட்ஸ்', 'ரஜினி ஹிட்ஸ்', 'கமல் ஹிட்ஸ்' என்று வாங்க சொன்னான். அவன் சொன்ன காரணம், ஒரு படத்தின் ஒலி நாடாவில் நமக்கு பிடித்த பாடல் ஒன்றோ, இரண்டோதான் இருக்கும். அதற்கு பதிலாக இது போல வாங்கினால் அனைத்து பாடல்களும் நன்றாக இருக்கும். சரி, வயதில் பெரியவன் சொல்கிறானே என்று என்று நானும் நம்பி வாங்கினேன். அந்த நம்பிக்கை வீண் போகவில்லை. கேட்க கேட்க இனிமையாக இருக்க, விவரங்களை தேடினேன். அதன் பிறகுதான் இளையராஜா எனக்கு மிகவும் நெருக்கமானார்.

கல்லூரிக்கு வந்த பின்பு, முதல் வருடம் மீண்டும் வானொலி மட்டும்தான். அப்போது கூட இளையராஜா என்ற பெயர் கேட்டால் கவனம் பாடல் மீதுதான். இரண்டாம் வருடம், எனது நண்பன் கணினி வாங்கி விட்டான். வழக்கம் போல அனைத்து பாடல்களும் இறக்கப்பட்டன. நான் இளையராஜா பாடல்கள் மட்டும் கேட்பேன். கொஞ்சம் கொஞ்சமாக பின்னணி இசையையும் உணர ஆரம்பித்தேன். ராஜா என்னுள் முழுமையாக இறங்கி விட்டார்.

இன்று வரை மட்டுமல்ல, நான் இறக்கும் வரை ராஜாவைத் தவிர வேறு யாரும் என் மனதை கவர மாட்டார்கள்.

1 comment:

  1. இங்கு பதிவிடுவதற்கு மன்னிக்கவும்
    ......................................................
    வணக்கம் நாங்கள் பூச்சரம் எனும் தளம்,
    தமிழ் பிளாக்ஸ்பாட்களில் வழக்காமாக பயன்படுத்தும் எழுத்துருக்களுக்கு பதில் இணையுரு (WebFont) எழுத்துக்களை பயன்படுத்த எந்த நாங்கள் வசதி ஒன்றை அளிக்கிறோம். இது முழுக்க முழுக்க இலவசம் தான். தமிழ் பிளாக் ஸ்பாட் தளங்களை ஆங்கில தளங்கள் போன்று உருவத்திலும், அழகிலும் உயர்த்தவேண்டும் என்ற எண்ணம் தான் உங்களை நாங்களே இதுபோன்று அணுக வைத்துள்ளது. 
    - இணையுரு (WebFont)  என்றால் என்ன? அதனால் என்ன பயன்?
    - இதை பயன்படுத்துவதால் நம்முடைய பிளாக் ஸ்பாட்டிற்கு  ஏதேனும் தீங்கு ஏற்படுமோ?
    - இது அவர்களுடைய தளத்தை விளம்பரப்படுத்த செய்யப்படும் உத்தியோ?
    - அவர்களாகவே தானாக வந்து உதவுவதாக சொல்வதில் ஏதேனும் பிரச்சனை இருக்குமோ?
    என்றெல்லாம் உங்கள் மனதில் நிச்சயம் கேள்விகள் எழும். அவ்வாறு தாங்கள் பயப்படவோ அல்லது ஐயமுறவோ தேவையில்லை. 100% எங்களை நம்பலாம். நாங்கள் கீழே கொடுத்துள்ள பதிவை பாருங்கள் உண்மை விளங்கும்.  
    தமிழ் கணிமையை (Tamil Computing) வளர்ச்சியுறும் நோக்கில் தான் நாங்கள் செயல்படுகிறோம். மற்ற மொழியினர் இதுபோன்ற வசதிகளை எப்போதே செய்துவிட்டனர், ஆனால் நாம் இந்த வசதியை இப்போது தான் இந்த பதிவில் படித்துகொண்டு இருக்கிறோம். மற்றமொழிகளை போல நம் மொழியையும் அழகாக வைத்துகொள்ள வேண்டுமல்லவா?...
    சும்மா... பேச்சுக்கு தமிழ் அழகு என்று சொல்வதை காட்டிலும் செய்து காட்டுவதை தான் நாங்கள் நோக்கமாக கொண்டுள்ளோம்.
    இந்த முறையில் உருவாக்கப்பட்ட ஒரு மாதிரி பிளாக்ஸ்பாட் இதோ பாருங்கள். http://poocharamtamilforum.blogspot.in/2014/05/this-is-sample-post.html 
    இதோ இணையுருக்கள் எவ்வாறு இணைப்பது என்பதை பற்றிய கட்டுரை 
    1) http://poocharam.net/viewtopic.php?f=57&t=1891
    2) http://poocharam.net/viewtopic.php?f=57&t=2053

    (அல்லது)
    1) http://puthutamilan.blogspot.in/2014/05/blog-post_14.html 
    2) http://puthutamilan.blogspot.in/2014/05/webfont-2.html  

    மேலும் ஏதேனும் உங்களுக்கு உதவியோ அல்லது ஐயமோ ஏற்பட்டால் தயங்காமல் rashlak@gmail.com என்ற முகவரிக்கோ அல்லது எங்கள் தள இடுகையிலோ அல்லது பிளாக்ஸ்பாட் இடுகையிலோ கேட்கலாம்.

    நன்றி மற்றும் வணக்கம்
    ராஜு.சரவணன்  

    படித்தவுடன் இதை நீக்கிவிடவும் 

    ReplyDelete

உங்களின் கீழ்/மேலான கருத்துக்கள்..