Sunday, December 23, 2012

பதிவு எண் : 50/5

பதிவு எண் : 50

வருடங்கள் : 5


சராசரி பதிவுகள்/வருடம் : 10


மொத்த பின்னூட்டங்கள் : 154


சராசரி பின்னூட்டங்கள்/பதிவு : 3


சராசரி வருகையாளர்கள்/பதிவு : 88

அதிகம் படிக்கப்பட்ட பதிவு : க்ரைம் நாவல். ஆசிரியர் - ராஜேஷ் குமார்(498)

அதிக பின்னூட்டமிடப்பட்ட பதிவு : ராஜா ரசிகனும், ரஹ்மானும்!!!(18)


டிஸ்கி 1 :
எழுத விஷயம் ஒன்றுமில்லை. அதனால, ஒரு விளம்பரம்!!

டிஸ்கி 2 : பதிவைத்தான் பெருசா போடா முடியல.. Fotoஆவது பெருசா போடலாம்னு.. ஏய், நோ கெட்ட வார்த்தை!

டிஸ்கி 3 : 50 பதிவு போடவே 5 வருடம் ஆயிருச்சே.. நானெல்லாம் 500 பதிவு போடணும்னா, கடவுளே.. இன்னும் எத்தனை பிறப்பு எடுத்தாலும் எனக்கு இந்த sivigai.blogspot முகவரியையும், அதே பழைய பதிவுகளும், பின்னூட்டங்களும் வர மாதிரியே இருக்க வரம் கொடு சாமி...


Monday, December 10, 2012

இசை எங்கிருந்து வருகிறது?

பயப்பட வேண்டாம். நீங்களும் வடிவேல் அல்ல. நானும் அவர் இல்லை (ஹி ஹி, அவர் பெயர் தெரியவில்லை). இந்த பதிவிற்கு ஏன் இந்த பெயர்க் காரணம் என்று பின்னர் தெரிந்து கொள்வீர்கள். இனி வழக்கம் போல எனது மொக்கைப் பதிவைத் தொடர்ந்து படியுங்கள்.

ரஹ்மானின் ஆஸ்கார் பற்றிய எனது பதிவு. இதைக் கொஞ்சம் படித்து விட்டு வாருங்கள்.

சும்மா, வலையுலாவிக் கொண்டிருந்த பொது, ஆஸ்கார் வாங்கி வந்த பின் நடந்த விழாவில் இளையராஜா பேசியதையைக் கேட்க நேர்ந்தது.அது பற்றி மற்ற மக்கள் இட்டிருந்த கருத்துக்களையும் படித்துக் கொண்டிருந்தேன். (அதை இங்கே பகிரவில்லை). உண்மையில் ராஜா மிக கஷ்டப்பட்டு சுற்றி, வளைத்து, எப்படியோ சமாளித்து பாராட்டியிருந்தார். 'குருவை மிஞ்சிய சிஷ்யன்' என்று சில பேர் சொல்லியிருந்தனர். உண்மையில் ராஜா ஒன்றும் குரு கிடையாது. ரஹ்மானும் சிஷ்யன் கிடையாது. ரஹ்மான் ராஜாவிடம் வேலை செய்தவர். அவ்வளவுதான். எந்தவொரு மனிதனாய் இருப்பினும், தனக்குக் கீழ் இருந்த ஒருவன்,தனக்கு மேலே, உயரே, உச்சிக்கு போன பின். தான் போய் வாழ்த்த வேண்டும் என்றால் கொஞ்சம் கஷ்டம்தாம். அதுவும் ராஜாவை, ஒரு மனிதனாகப் பார்க்கும்போது அந்த கஷ்டம் புரியும்.

ஒரே அலுவலகத்தில், உங்களுக்குக் கீழ் வேலை பார்க்கும் ஒரு சின்னப் பையன், தன்னுடைய திறமையால் முன்னேறி, (உங்களுக்கும் திறமை உண்டு, ஆனால் என்ன, கொஞ்சம் வாய் அதிகம். தன்னால் மட்டுமே முடியும் என்ற தலைக்கனமும் உண்டு) உங்களுக்கு மேல் போய் நிற்கும்போது உங்களுடைய மனநிலை எப்படியோ அதே போலத்தான் அவருக்கும். அவர் என்னதான் தன்னை ஞானி என்று சொல்லிக் கொண்டாலும், அவர் அப்படியில்லை. இருந்திருந்தால், வைரமுத்துவுடன் எப்போதோ சேர்ந்திருப்பார்.

எனக்கு புரியாத இன்னொரு விஷயம். பாரதி ராஜா - இளையராஜா - வைரமுத்து கூட்டணி எப்போது எப்போது அமையும் என்று எல்லோரும் கேட்பதுதான். ஒருவேளை அமைந்தாலும், அது ஒரு வியாபாரமாக மாற்றப்படும். அவ்வளவே. ஒருவேளை ராஜாவும், வைரமுத்துவும் நாங்கள் குடும்ப நண்பர்காலக் இணைகிறோம், தொழில் முறையில் அல்ல, என்றால் நாம் எல்லோரும் மகிழ்ந்து விடப் போகிறோமா? இல்லை. நமக்குத் தேவை, நல்ல இசையும் அழகான பாடல் வரிகளும். அப்போது அவர்களுக்குள் அந்த Chemistry நன்றாக இருந்தது. முப்பது வருடங்களுக்குப் பின்னும், அது அப்படியே இருக்கும் என்று சொல்ல முடியாது.

இப்போது அதையே வேறு கண்ணோட்டத்தில் பார்ப்போம். எப்படிப் பார்த்தாலும், வியாபாரம்தான் முக்கியம். ஒருவேளை அவர்கள் இணைந்தாலும், இருவரும் இலவசமாக செய்யப் போவதில்லை. பணம்தான். எனவே, ராஜா எங்கிருந்தோ இசையைக் கொடுக்கலாம். அதற்கு வைரமுத்து தன்னுடைய வரிகளைக் கொடுக்கலாம். இருவரும் ஒன்றாக இருக்க வேண்டிய அவசியமே இல்லை இந்தக் காலத்தில். ஆனால், இருவருமே ஒப்புக் கொள்ள மாட்டார்கள். காரணம் தன்மானம் அல்லது முரட்டுப் பிடிவாதம்.

இங்கும் அதே அலுவலக உதாரணத்தை எடுத்துக் கொள்ளலாம். உங்களுக்கு உங்கள் மேலதிகாரியுடன் பிரச்சினை என்று என்று வேறு துறைக்கு சென்று விட்டீர்கள். பயங்கர மனக்கசப்பு. ஒரு மிக மிக உயர்ந்த அதிகாரி வந்து "நீங்க ரெண்டு பெரும் மறுபடி ஒண்ணா ஒரே டீம்ல இருந்தா நல்லாருக்கும், சம்பளம் கூட ஏத்திக்கலாம்" என்றால், நீங்கள் என்ன சொல்லுவீர்கள்? "எனக்கு என் மரியாதைதான் முக்கியம்" என்பீர்கள் அல்லவா? இது உங்களது தன்மானம் என்று நீங்கள் சொல்வீர்கள். மற்றவர்கள் முரட்டுப் பிடிவாதம் என்பார்கள். எனவே இதை விட்டு விடலாம். இருவரும் என்கிருதாலும், தங்களது பணிகளை, தனியே, செவ்வனே செய்கின்றனர்.

தாமிரா இது பற்றி ஆனந்த விகடனில் எழுதிய சிறுகதையில், கடைசியாக வரும் வசனம். "அவங்க ரெண்டு பெரும் சேந்து பண்ணின அந்த பழைய பாட்டெல்லாம், அவங்க கேக்கும்போது, கண்டிப்பா அவங்களுக்கு பழைய நெனப்பு வராம இருக்காது. ஆனா, என்ன அவங்கள தடுக்குது" (இதே வரிகள் இல்லை. என் நினைவுகளில் இருந்து எழுதியுள்ளேன்).

இந்த 'பழைய நினைப்பு' பார்த்தவுடன், எனக்கு ஒரு 'பழைய நினைப்பு'. ஹாரீஸ் ஜெயராஜ், ஒரு மேடையில் சொன்னார். பத்து வயதில், இசைக் குழுவில வேலை செய்யும் தன தந்தைக்காக சாப்பாடு கொண்டு போகும்போது, அங்கு ரஹ்மான் மட்டும் தனியே அமர்ந்து சாப்பிடக் கூட போகாமல் எதையாவது இசைத்துக் கொண்டே இருப்பாராம். அவர்தான் தன்னை முதன் முதலில் 'வாசிக்கிரியா?' என்று கேட்டதாகவும் சொன்னார். இன்னொரு விழாவில், ரஹ்மான் கூறியது. "அப்பா நான் ராஜா சார்கிட்ட வேலை பாத்திகிட்டிருந்தேன். ஒரு சின்னப் பையன் வந்து அங்கிள் அங்கிள்னு என்கிட்டே பஐவான். அதுதான் யுவன்". இதே போல ராஜாவுக்கும், ரஹ்மான் சிறு வயதில் எப்படி தன்னிடம் வேலைக்கு வந்தார் என்றும் சொல்லியிருக்கிறார். இன்னும் யாரும் எதையும் மறக்கவில்லை. இங்கே நல்ல விஷயமாக இருக்கிறது. வைரமுத்து விஷயத்தில், கெட்டதாக உள்ளது. என்ன கொடுமை.

"அடக் கொடுமையே. நான் சொல்ல வந்த விஷயத்தைத் தவிர மத்த எல்லாத்தையும் சொல்லிக்கிட்டிருக்கேன் பாருங்க."

ரஹ்மான் காப்பி என்றெல்லாம் தேடுவேன் என்று சொன்னேன் அல்லவா. அதே போல ஒவ்வொரு இசையமைப்பாளரும் காப்பி அடித்தை எல்லாம், வலையுலாவினால் கிடைக்கும். ராஜாவும் கூட அதில் உள்ளார். அங்கே இரண்டு பாடல்களும் இருக்கும். ஒரிஜினல், காப்பி என்று. சில பாடல்களில் இதில் என்ன காப்பி அடித்தனர் என்று கூட தெரியாது.

இதை எதற்கு கூற வந்தேன் என்றால், நாம் கேட்காத பாடல் ஒன்றைத் தட்டி, போட்டு அது நமக்கும் பிடித்து, ரொம்ப நாள் கழித்து இது 'காப்பி' என்று நமக்குத் தெரிந்தால், "பரவாயில்லை" என்று பொறுத்துக் கொள்வோம். என் விஷயத்தில், இது ராஜாவுக்கும், ரஹ்மானுக்கும் மட்டும்தான் பொருந்தும். மற்றபடி, தேவா பாடல்கள் என்றால், எங்கேயிருந்து அடித்திருப்பார் என்று தேடுவோம். ஆனால், எந்தப் பாடலையும் கேட்டவுடனே காப்பி என்று தெரிந்ததில்லை. எப்போதாவது ஒரிஜினல் பாடலைக் கேட்கும்போது, "இது, அதுல்ல?" என்று தோணும்.

ஆனால், இந்த ஹாரீஸ் ஜெயராஜ் இருக்கிறாரே, அவர் ஏன் என்னிடம் நேரடியாக அடிக்கடி மாட்டுகிறார் என்று தெரியவில்லை. முதலில், 'கோவில்' படத்தி வரும் 'காலேஜுக்குப் போவோம்' பாடல். 'ஜாதி மல்லி' படத்தில் வரும் 'கம்பன் எங்கு போனான்' பாடலை நினைவூட்டியது. ஏழாம் அறிவு படத்தில் வரும் சைனீஷ் பாடல், வெட்கக் கேடு. என் நான்கு வயது அக்கா மகள், கேட்டவுடனே, "ஹை, twinkle twinkle little star" என்று கத்தினாள். "நங்கை, நிலாவின் தங்கை" பாடல், நல்ல வேளை, மைக்கேல் ஜாக்ஸன் இறந்து விட்டார்.

இதியெல்லாம் விட இறுதியாக ஒன்று. மாற்றான் படம் ரொம்ப நாளாக பார்க்க முடியவில்லையே என்று, சற்றே கஷ்டத்துடன் (?) தரவிறக்கம் செய்து பார்த்தேன். ஆனால், பார்த்த பின், நல்ல வேலை என்று நினைத்துக் கொண்டேன். அந்தப் படத்தில், சூர்யாவின் Factoryல் அரசு ஆய்வுக்கு வரும் காட்சியில் பின்னணி இசை, 'The Italian Job' படத்தில் தொடக்கத்தில் வரும் இசை. அப்படியே சுட்டிருந்தார். அந்தப் படம் பார்த்து கிட்டத்தட்ட ஏழெட்டு வருடங்களுக்கு முன் பார்த்தது. இசை அப்படியே மனதில் நின்று விட்டது. இதில் இன்னும் கொடுமை அவர் ஒரு நேரத்தில் ஒரு படத்திற்கு இசையமைத்தால்தான், கவனமுடன் பணியாற்றமுடியும் என்று கூறியதாகவும், அதனால் மாற்றான், துப்பாக்கி முன் பின்னே வெளி வந்ததாகவும் தகவல். ஏன் இப்படி? இந்தப் பொழப்புக்கு..

இந்தி காணொளியில் 1:19ல் இருந்து வரும் இசை, அப்படியே அந்த ரைடு நடக்கும் காட்சியில் வரும். அதாவது சூர்யாவின் தந்தையே அழைக்கும் காட்சிக்குப் பின் வரும் காட்சிகள். ஹாரீஸ் செய்த ஒரே மாற்றம், நடுவே, ஒரு சின்னப் பெண் பாரத நாட்டியம் ஆடும்போது சலங்கை சத்தம் வரும். அவ்வளவே. எனக்கு அந்தக் காணொளி கிடைக்க வில்லை.


இப்ப சொல்லுங்க, இசை எங்கிருந்து வருகிறது?

ஹாரீஸ் ஜெயராஜ்: அமெரிக்காவிலே, இங்கிலாந்திலே, ஜெர்மனியிலே (அன்பே சிவம் பாடல் ஸ்டைலில் படிக்கவும்).

Monday, November 26, 2012

நாட்டு நடப்பு


"நம்ம நாடு எப்பங்க முன்னேறப் போவுது.. பாருங்க சிங்கப்பூர், ஜப்பான் எல்லாம் எப்படி முன்னேறியிருக்காங்க."

"என்னங்க பேசறீங்க, அதெல்லாம் சின்ன நாடுங்க.. ரொம்ப ஈஸியா முன்னேறலாம்.. நாம அப்படியா?" ."

"அப்படியெல்லாம் ஒன்னுமில்லீங்க, சைனா, அமெரிக்கா எல்லாம் பெரிய நாடுதான்.. அவங்க எல்லாம் முன்னேறாமலா இருக்காங்க?" ."

"அட என்னாங்க மறுபடியும் மறுபடியும் புரியாம பேசறீங்க, அங்க எல்லாம் ஒரே மொழி.. அதனால எந்த பிரச்சினையும் இல்ல.. இங்க அப்படியா?" ."

"என்னதான் சொல்லுங்க.. எல்லாம் இந்த அரசியல்வாதிங்க ஒழுங்கா இருந்தா எல்லாம் முன்னேறிடும்"."

"அவங்கள மட்டும் சொல்லி குத்தமில்லீங்க, இந்த அரசு வேலை செய்யறவங்க ஒழுங்கா இருந்தாலே போதுங்க.. எல்லாம் தானா முன்னேறும்"."

இவை அனைத்தும் பல படங்களில் வந்திருக்கும், தினமும் பொது மக்கள் பேசிக்கொண்டிருப்பதுதான்.. ."

உண்மையில் யார்தான் பொது மக்கள்.. நாம் பத்து பேருக்கு பொது மக்கள் என்றால், நமக்கு பத்து பேர் பொது மக்களாக இருப்பார்கள்.. 'அரசியல்வாதியும் பொதுமக்களும், மருத்துவரும் பொதுமக்களும், அரசுப் பணியாளரும் பொதுமக்களும், கணினிப் பொறியாளரும் பொதுமக்களும், துப்புரவுத் தொழிலாளியும் பொதுமக்களும்' என்று ஒவ்வொருவரும் மற்றொருவருக்கு பொது மக்களாகவே இருக்கிறோம். உண்மையில் நாம் ஒவ்வொருவருமே நம் நாடு முன்னேறாமல் இருப்பதற்கு காரணம்தான். ."

ஏன் இந்தியாவில் மட்டும் யாரும் சட்டங்களை மதிக்காமல் நடக்கிறோம்? ஏன் நம் நாடு முன்னேற வேண்டும் என்று எண்ணாமல், தான் மட்டும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம்? ஏன் மற்ற நாடுகளில் அப்படி இல்லை? என்னுடைய எண்ணங்கள் பின் வருபவை.. ."

பெரும்பான்மையான வளர்ந்த நாடுகள் (எனக்குத் தெரிந்த வரை இங்கிலாந்து தவிர) மற்ற அனைத்து நாடுகளும் மிக மோசமான நிலையில் இருந்தவை. மக்கள் அனைவரும் கஷ்டப்பட்டால் ஒழிய நாடு முன்னேறாது என்ற நிலைமை. நம் நாடு முன்னேற வேண்டும் நாமும் முன்னேற வேண்டும் என்ற வேகம், வெறி. இன்னொரு மிக முக்கியமான ஒன்று "நம் நாடு, நாட்டின் சட்டங்களை நாமே மதிக்கா விட்டால் வேறு யார் மதிப்பார்கள்" என்ற எண்ணம், அதுவே தலைமுறை தலைமுறையாக தொடர்கிறது. ."

நம் நாடோ, என்றும் வளமான நாடு. வரலாற்றில் எந்தப் பக்கத்தைப் புரட்டினாலும் இந்தியா வளமாகத்தான் இருந்தது, இருக்கிறது, இருக்கும். என்னதான் அரசியல்வாதிகள், பன்னாட்டு நிறுவனங்கள் வளங்களைச் சுரண்டினாலும் இந்தியா அழியாது. பிரச்சினை என்னவென்றால் வளங்கள் குறையக் குறைய மக்கள் தொகை அதிகரிக்கிறது. ."

நம் மக்கள் அனைவருக்கும் உள்ள மிகப் பெரிய பிரச்சினை, "நான் மட்டும் செஞ்சா என்ன ஆயிடப் போகுது" என்ற எண்ணம். இருபது வருடங்கள் கழித்து நடக்கப் போகும் பெண்ணின் திருமணத்திற்கு நகை சேர்க்கும்போது இருக்கும் தொலை நோக்குப் பார்வை, நம் நாட்டைப் பற்றி இல்லை. "என்ன பெருசா நடந்திடப் போகுது, இன்னைக்கு செத்தா நாளைக்குப் பால்" என்பார்கள். தானும், தனது குடும்பம், குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டும். அதற்கு வீட்டில் மட்டும் ஒழுங்காக இருந்தால் போதாது என்பது இன்னும் யாருக்கும் புரியவில்லை. ."

என்னுடைய கருத்து என்னவென்றால், நமக்கு தேவை ஒரு சர்வாதிகார ஆட்சிதான். அப்போதுதான் நாம் முன்னேறுவோம். இந்திரா காந்தியின் 'எமெர்ஜென்சி' காலம் போல. மேலை நாட்டு மக்களுக்கு தங்களது நாட்டின் மேலும், சட்டங்கள் மேலும் மரியாதை உள்ளது. நமக்கு அது சுட்டுப் போட்டாலும் வராது. பயம் வர வேண்டும். பயம் வந்தால், கொஞ்ச நாட்களில் அது பழகி விடும். அனைத்து சர்வாதிகாரிகளும் மோசமானவர்களாக இருந்தாலும், தன நாடு முன்னேற வேண்டும் என்ற எண்ணமே பெரும்பான்மையோருக்கு இருந்தது. அப்படிப்பட்ட ஒருவர் வர வேண்டும். ."

ஆம். நாம் கஷ்டப்படுவோம். நினைத்தபடி எதுவும் செய்ய முடியாது. கருத்து கூற முடியாது. இப்போது மட்டும் என்ன வாழ்கிறதாம். உண்மையில் நம் மூத்த சந்ததியிடம் இருந்த ஒரு நல்ல கெட்ட குணம் என்னவென்றால், "நாமத்தான் ரொம்ப கஷ்டப்பட்டுட்டோம், நம்ம புள்ளங்கலாவது நல்லா இருக்கட்டும்" என்ற எண்ணம்தான். ."

ஏதேதோ கூற வேண்டும் என்று நினைத்தேன். மறந்து விட்டது (சும்மா, தூக்கி உள்ள வச்சிருவாங்கன்னு ஒரு பயந்தான்). எனவே, மக்கள் பயமின்றி தங்கள் கருத்துக்களைக் கூற வேண்டும். ."

உறுதிமொழி: ஒருவேளை நான் கைதி செய்யப்பட்டால், என்னுடன் பள்ளியில் படித்த பூபதி என்ற நண்பன் வக்கீலாக உள்ளான்.அவனே எனது வழக்கை எடுத்து நடத்த வேண்டும் என்று உளமார உறுதி அளிக்கிறேன். சந்தோசமா பூபதி! ."

சந்தேகம்: ஒருவேளை நான் வெளிநாட்டில் இருந்து பதிவிட்டால், 'ராகவன்' வந்து என்னைக் கைது செய்வாரோ?



Sunday, October 7, 2012

மனிதன், இந்தியன், தமிழன்

மனிதன், இந்தியன், தமிழன்

இந்த மூன்று வார்த்தைகளையும் நம்மூரில் யாரிடமாவது சொன்னால், உடனே அனைவரும் 'ரஜினி படம், கமல் படம், விஜய் படம்' என்றுதான் சொல்வார்கள். என்ன செய்ய. நம் புத்தி அப்படி. 'உன்னைப் போல் ஒருவன்' படத்தில் மோகன் லால், அனுஜாவிடம் 'நீ யார்' என்றவுடன் அவர் 'பெண், இந்தியன், பத்திரிக்கையாளர்' என்பார். மோகன் லாலும் 'நல்லது, அந்த வரிசை எனக்குப் பிடித்தது' என்பார். அதே போலதான் நானும் இருக்க வேண்டும் என்று ஆசை. இந்தப் படத்தை பார்த்துதான் என்றில்லை. அதற்கு முன்பே அப்படிதான். எல்லோரும் அதே போல இருக்க வேண்டும் என்பது என் ஆசை.

ஆனா; நம்மால் எந்த நிலையிலும் இந்த மூன்றில் ஒன்றாகக் கூட இருக்க முடியவில்லை என்பதுதான் நிதர்சனம். இந்தியாவிலேயே நம் தமிழர்களுக்கு மட்டும்தான் 'இந்தியன்' என்ற எண்ணம் அதிகமாக உள்ளது. அதனால்தான் இருப்பதிலேயே தமிழகம்தான் பாதுகாப்பான இடம் என்கிறார்கள். அது மட்டுமின்றி நமக்கு ஹிந்தி தெரியாததால், நாம் மற்றவர்களிடமிருந்து வித்தியாசம் தெரியக்கூடாது என்று இந்தியன் என்று சொல்லிக் கொள்வோம்.

ஆனால், வேறு எங்கும் நம்மை இந்தியாவில் உள்ளவன் என்றே ஒத்துக் கொள்ள மாட்டார்கள். "ஹிந்தி தெரியாதவனை எல்லாம் நாங்க இந்தியனா நினைக்கிறதில்ல" என்று என் நண்பனின் வட நாட்டை சேர்ந்த மேலாளர் சொல்கிறார். உண்மையில் வட நாட்டவர் ஆந்திர, கர்நாடக, கேரள மக்களையும் 'மதராசி' என்று ஒதுக்கினாலும், அவர்கள் ஹிந்தியில் பேசி ஒட்டிக் கொள்வார்கள். நாம் மட்டும் 'பே' என்று முழிப்போம்.

மனிதனாக இருக்கிறோமா என்றால் என்ன சொல்ல. பிச்சைக்காரர்களுக்கு காசு கொடுக்கிறேன், கண் தெரியாதவர்கள் சாலையைக் கடக்க உதவுகிறேன் என்பதா. நமக்கு தெரியாத ஆட்கள் பாதிக்கப்படும்போது நாம் என்ன செய்கிறோம். 'அதுக்குதான் அரசாங்கம்' இருக்கே என்கிறோம்.

பாரதி தாசனின் இந்தக் கவிதையை நிறைய பேர் படித்திருப்போம் என்று நினைக்கிறேன். இதில் வருவது போல, 'கடுகு உள்ளம்' கொண்டவர்கள் அனைவரும் 'மிக நல்லவர்கள், எந்த வம்பு தும்புக்கும் போக மாட்டார்கள், தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பார்கள்'. நானும் கடுகு உள்ளம் கொண்டவன்தான். என்ன செய்ய. கல்வி முறை, வளர்க்கப்பட்ட முறை அப்படி.

பெண்டு தன் பிள்ளை சோறு வீடு சம்பாத்யம் 
இவையுண்டு தானுண்டு என்போன் 
சின்னதொரு கடுகு போல உள்ளம் கொண்டோன் 
தெருவார்க்கும் பயனற்ற சிறிய வீணன்!

கன்னலடா என் சிற்றூர் என்போன் உள்ளம்
கடுகுக்கு நேர் மூத்த துவரை உள்ளம்

தொன்னையுள்ளம் ஒன்றுண்டு
தனது நாட்டுச் சுதந்திரத்தால் பிறர் நாட்டைத் துன்புறுத்தல்

ஆயுதங்கள் பரிகரிப்பார், அமைதி காப்பார், அவரவர்தம் வீடு நகர் காக்க வாயடியும் கையடியும்
வளரச் செய்வார் மாம்பிஞ்சி உள்ளத்தின் பயனும் கண்டோம்

உள்ளம் அன்பு உள்ளம் பெரிய உள்ளம்
தொல்லுலக மக்களெல்லாம் ஒன்றே
என்னும் தாயுள்ளம் தனிலன்றோ இன்பம் ஆங்கே சண்டையில்லை தன்னலந்தான் தீர்ந்ததாலே!

இந்தியனாகத்தான் நாம் நிறைய நேரம் இருக்கிறோம், அதுவும் தமிழனாக இருக்க வேண்டிய நேரங்களிலும். அணையை உடைத்தால் என்ன, அதுதான் புதிதாக கட்டி தண்ணீரை தருகிறேன் என்கிறார்களே, அங்கேயே பஞ்சம் என்கிறார்களே. அப்புறம் ஏன் தண்ணீர் கேட்டு போராட்டம் நடத்த வேண்டும் என்று வெட்டி நியாயம் பேசுகிறோம்.

அலுவலகத்தில், புதிதாக ஒரு ஆந்திர மேலாளர் வந்தார். அவர் வந்த பின், புதிதாக சேர்ந்த அனைவரும் ஆந்திர நாட்டவரே. அமெரிக்காவில் என்னுடன் வந்தவர் ஆந்திரா. அங்கே வெளியே செல்லும்போது யாராவது தெலுங்கு பேசினால், இவரே தானாக சென்று கொஞ்ச நேரம் பேசி விட்டுதான் வருவார். சரி, நாமும் முயன்று பார்க்கலாம் என்ற அனுபவத்தை ஏற்கனவே சொன்னேன்.

எனக்கு தெரிந்து, மற்ற மாநிலங்களை விட நாம் முன்னேறி இருப்பது, பெயரில் இருந்து சாதிப் பெயரை எடுத்ததுதான். இரு தலைமுறைகளுக்கு முன்னமே அது நடந்து விட்டது. ஆனால், அது பெயரில் இருந்து மட்டும்தான் நீங்கி உள்ளது. ஒவ்வொருவரும் தன் இடத்தை விட்டு வெளியே இருக்கும்போது தன் இடத்தவரைப் பார்க்கும்போது ஏற்படும் இன்பமும் பேச்சும் தமிழனிடம் குறைவுதான். இது சொந்த அனுபவம்.

எந்தவொரு விஷயத்திற்காக தமிழகத்தில் கடையடைப்பு நடந்தாலும் அது முழு ஆதரவுடன் இருக்காது. எல்லா துறையினரின் ஆதரவும் கிடைக்காது. கர்நாடகத்தில் பாருங்கள், தொலைக்காட்சியில் கூட ஒளிபரப்பு கிடையாது. சாலையில் சென்ற இரு சக்கர வாகனங்களின் சக்கரங்கள் கழற்றப்பட்டுள்ளன. நம்மவர்களைக் கேட்டால் 'அது அராஜகம்' என்பார்கள். நம்மாட்களுடைய போராட்டம் எல்லாம் முகப்புத்தகத்திலும், பதிவுலகிலுமே முடிந்து விடுகிறது.

அமெரிக்காவில் இந்தியர்கள் (சில தமிழர்கள், ஆந்திரா, வட நாட்டவர் எனக் கலவை) ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது அங்கு அங்கு வந்த ஒரு அமெரிக்கர் "நீங்கள் அனைவரும் ஒரே நாடு, ஆனால் வேறு வேறு மொழியில் பேசுகிறீர்களே?" என்றார். அப்போது ஒரு வட நாட்டவர் "எங்கள் அனைவருக்கும் வேறு வேறு தாய் மொழி. எங்கள் அனைவருக்கும் ஒரு தேசிய மொழி உண்டு, அதுவும் சில பேருக்கு தெரியாது" என்று நக்கலாக சொல்ல அனைவருமே சிரித்தனர். பிறகு தனியே ஒரு சந்தர்ப்பத்தில், தேசிய மொழி எதுவும் இல்லை என்று ஆதாரத்துடன் சொன்னேன். உடனே அவர் "சரி நீங்கள் அதற்காக வேற்று நாட்டு மொழி கற்க வேண்டுமா?" என்றார்."சரி, நீங்கள் ஏன் கற்றீர்கள்? நான் எனது தாய் மொழியையும் ஒரு பொது மொழியையும் கற்றேன்" என்றேன். பதில் இல்லை

எப்போது மனிதனாக. இந்தியனாக, தமிழனாக இருக்க வேண்டும் என்பதை நானும் இன்னும் சரியாக புரிந்து கொள்ளவில்லை. எனக்கு இதுவரை எந்தப் பிரச்சினையும் இல்லை. அதனால் நான் நானாகவே உள்ளேன். பார்க்கலாம்.

Thursday, October 4, 2012

ஆளையே மயக்கும் ஆனந்த விகடன்

வீட்டிற்கு ஒரு புதிய தேவதை வந்து விட்டாள். அந்த மகிழ்ச்சியில் கொஞ்ச நாட்கள் சென்னைப் பக்கமே வரவில்லை அதுதான்

ஆனந்த விகடனில் இருந்த மதன் வெளியேறியதில் இருந்து சற்றே அரை மனதுடன் தான் படித்து வந்தேன். பேயோன் பக்கம், வட்டியும் முதலும் மற்றும் அவ்வப்போது சில நல்ல கட்டுரைகளும் வந்த வண்ணம் உள்ளன. இப்போது பல நல்ல புதிய பகுதிகளும் வருகின்றன

கடந்த வாரம் வந்ததில் பல கட்டுரைகள், அவை மனதைக் கவர்ந்தன என்று சொல்ல முடியாது, ஆனால் அனைத்தும் மனதை உறைய, பதற மற்றும் கலங்க வைக்கும் கட்டுரைகள். ஒவ்வொன்றாக பார்ப்போம்.

இடிந்தகரையில் இப்போது என்ன நடக்கிறது'

கூடங்குளத்திற்கு நான் ஆதரவா, எதிர்ப்பா என்று கேட்டால், சொல்லத் தெரியாத சராசரி குடி மகன் நான். நான் நன்றாக இருக்க வேண்டும். அதற்காக அடுத்தவன் குடி அழிவதில் எனக்கு விருப்பமில்லை. உண்மையில் அந்த கட்டுரையும் அணு உலை வேண்டுமா வேண்டாமா என்பது பற்றி இல்லை. அங்கு நடந்த அராஜகம், அத்து மீறல் பற்றித்தான்.

'மதராசி வக்கீல்'

நாமக்கல்லில், ஆதிக்க சாதியில் பிறந்து, சாதிப் பிரிவினையை எதிர்த்துப் போராடும் ரத்தினம் பற்றிய கட்டுரை. சாதியை வைத்து பிழைப்பு நடத்தும் கட்சிகள் பற்றி அவர் சொன்னவை சரியான சாட்டையடி. அதைப் பற்றி பாலா போட்ட கார்ட்டூன்.



'இதுவும் கடந்து போகும்'

இதற்கு முந்தைய வாரம் சிவகாசி பட்டாசு தொழிற்சாலைகள் பற்றி வந்தது. இந்த வாரம் அரசு மருத்துவமனைகளின் அவலம்.

கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு முன், என் தாத்தா ஒருவரை பாம்பு கடித்து விட்டது என்று அரசு மருத்துவமனைக்கு போனோம். அனைவரையும் கவனிக்க வேண்டிய முறையில் கவனித்ததால் எல்லாம் நல்ல படியாக முடிந்தது. ஆனால், இன்னொரு தாத்தா, அதிகாலையில், தனியாக வண்டியில் செல்லும்போது விபத்திற்கு உள்ளாகி, ரத்தம் முழுதும் வெளியேறும் நிலையில் அரசு மருத்துவமனையில் போடப்பட்டார். யாரும் இல்லை. முதலுதவி கூட செய்யப்படவில்லை. அப்போது யாரோ ஒரு தெரிந்த புண்ணியவான் அவரைப் பார்த்து உடனே 'கவனிக்க' வேண்டியவர்களைக் கவனித்ததால், உயிர் மட்டும் பிழைத்தது. அப்போது அனைவரும் ஊரில் பேசிக் கொண்டது 'நல்ல வேளைப்பா.. கடைசி நேரத்துலயாவது பாத்த.. இல்லேன்னா..".. யாரும் பணியாளர்களைக் கேள்வி கேட்கவில்லை.

'மன்மோகன் சிங்கின் கொலை வெறித் திட்டம்'

நம் அனைவருக்குமே தெரிந்த உண்மை, ஒரே பொருள், ஒரே பகுதி, ஆனால் வேறு வேறு விலை. ஏன்? நாம் யோசிக்கவில்லை. தேவையும் இல்லை. ஏனெனில் நம்மிடம் பணம் உள்ளது. நமக்கு பணம் மரத்தில் காய்க்கவில்லை, ஆனாலும் ஒன்றும் கவலை இல்லை. மற்றவர்கள் எப்படிப் போனால் என்ன. அதுதான் நீங்களே சொல்கிறீர்களே, ஒரே பொருள், மூன்று விலை. காசில்லாதவர்கள் குறைந்த விலை பொருளை வாங்கட்டும்.

இது பொதுவாக அலுவலகத்தில் பேசிக்கொண்டிருக்கும்போது ரொம்ப நாள் முன்பு வந்த கருத்து. தவளையை தண்ணீரில் போட்டு சுட வைத்தால், எப்படி இருக்குமோ அது போலத்தான் இது. அமெரிக்காவில் நம்மூர் கடைகள் பலவற்றை பார்த்தபோது "பரவால்லையே, நம்மூரு கூட ரொம்ப முன்னேறிடிச்சே" என்று தோன்றியது. ஆனால் அது தப்பென்று உரைத்தது.எனது வெள்ளைக்கார அதிகாரி சொன்னது. "நான் வால் மார்ட்டில் எந்த பொருளும் வாங்க மாட்டேன். அது அமெரிக்காவில் பலரின் வாழ்க்கையை அழித்துள்ளது" என்றார். அவரின் நண்பர் வைத்திருந்த கடை எப்படி கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட்டது என்று கூறினார். நம்மூரு போல, ஆட்டோவும், அடியாட்களும்தான் வரவில்லை.

என்னடா, எல்லாமே சோகமாகவே உள்ளதே என்கிறீர்களா? கிரிஷா நாகராஜே கௌடா பற்றிய கட்டுரை, ஆறாம் திணை, புதிய கல்வி முறை என்று மகிழ்ச்சியான விஷயங்களும் உள்ளன. பதிவிறக்கம் செய்து படிக்க.

Saturday, July 7, 2012

இசை @ இளையராஜா

நான் ஏற்கனவே சொன்னது போல, ஆன்-சைட்டில் நிறைய படம் பார்க்க வேண்டும். அல்லது YouTubeல் ஏதாவது (நல்ல) நகைச்சுவைக் காட்சிகள், பாடல்களைப் பார்க்க வேண்டும். அப்படி தேடும் போதுதான் கீழ்க்கண்ட பாடல்களை காண நேர்ந்தது. இவை அனைத்தும் என்னிடம் உள்ளன என்றாலும், அவ்வளவாக கேட்க வேண்டுமென்று தோன்றியதில்லை. உண்மையிலே மிக அருமையான இசை. சிலவற்றை கண்ணை மூடிக்கொண்டு கேட்டால் இன்னும் அருமையாக இருக்கும். ஏனென்று தனியாக சொல்ல வேண்டியதில்லை.

நான் பார்த்த படங்களைப் பற்றி இன்னொரு பதிவு போட்டு கொல்கிறேன். ஓ, சொல்கிறேன்.

ஜானகி கலகனலேது (ராஜ்குமார் - தெலுங்கு):

தயவு செய்து கண்ணை மூடிக்கொண்டு பாடலை மட்டும் ரசிக்கவும். பார்த்து விட்டு ஏதாவது பிரச்சினை என்றால், நான் பொறுப்பாக மாட்டேன். மிக மிக அருமையான பாடல். நான் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருக்கும் பாடல். என்னுடன் உள்ள தெலுங்கு நண்பன் கிட்டத்தட்ட ஐம்பது முறைக்கும் மேல் கேட்டுக்கொண்டே இருந்தான். ஒரு சின்ன சந்தேகத்தில், இளையராஜா? என்றேன். ஆமா ஆமா ஆமா என்றான். இப்போது நானும் அவனுக்கு போட்டியாக கேட்டுக் கொண்டுள்ளேன். இந்த பாடல் தமிழில் வந்துள்ளதா? யாராவது விளக்க வேண்டும். பாடல் வரிகளும் மிக அருமையாக, புது மணத்தம்பதியர் எப்படி இருக்க வேண்டும் என்று எழுதப்பட்டதாக சொன்னான். என்னவோ, இளையராஜாவுக்கு மொழி கிடையாது.



புன்னகையில் மின்சாரம் (பரதன் - தமிழ்):

உண்மையிலே இந்தப் பாடலை படமாக்கியிருக்கும் விதம் அருமையாக இருக்கும். பின்னணியில் வெள்ளை மட்டும். அட்டகாசமான, துள்ளலான இசை. ஒரே ஒரு உறுத்தல்தான். எப்படி சொல்ல. சரி விடுங்க. கடைசி ஒரு நிமிடம் மட்டும் வேண்டுமானால் கண்ணை மூடிக்கொள்ளலாம்.


அப்புனே தீயேனே (ஜகதீக வீருடு அதிலோக சுந்தரி - தெலுங்கு):

இந்த பாடல் தமிழில் வந்துள்ளதா என்று தெரியவில்லை. ஆனால், ஹிந்தியில் வந்துள்ளது. சுட்ட பழம். தெலுங்கு சிவாஜியில் ரஜினி ஸ்ரேயாவுடன் இந்த பாடலுக்குத்தான் ஆட்டம் போட்டிருப்பார். அருமை. வேறென்ன சொல்ல.


சுட்ட படம் (பேட்டா):


ஜோதேயல்லி (கீதா - கன்னடம்):

இதை தமிழில் கண்டிப்பாக கேட்டிருப்பீர்கள். கன்னடத்தில் 'கொலை வெறிப் பாடல்'. எந்தவொரு இன்னிசை நிகழ்ச்சியும் இந்தப் பாடல் இல்லாமல் இருக்காது. எனக்கும் தமிழை விட (விழியிலே மணி விழியிலே - நூறாவது நாள்), ஹிந்தியை விட (ஜானே தோ நா - சீனி கம்) இதுதான் பிடிக்கும்.







முதி முதி (பா - ஹிந்தி):

சீனி கும் படத்திற்குப் பின், பா படத்திற்கும் பழைய பாடல்களையே ராஜா கொடுள்ளார் என்று கேள்விப்பட்டதும், சற்று கஷ்டமாக இருந்தது. ஆனால், இந்த ஒரு பாடல், 'ராஜாடா நான்' என்று சொல்ல வைத்து விட்டது. இதை நீங்கள் கண்டிப்பாக பார்க்கலாம்.


சும்மா மக்களை சந்தோசப்படுத்தவே இந்தப் பதிவு. கேட்டு மகிழுங்கள். மீண்டும் சந்திப்போம்.

Wednesday, July 4, 2012

ஆன்-சைட் அமெரிக்கா 2

மக்களே!ஆன்-சைட் வந்த பிறகு நாம் வளர்த்துக் கொள்ள வேண்டிய தகுதிகள் என்னவென்றால், நிறைய படங்களை  Stream செய்து பார்க்க பழகிக் கொள்ள வேண்டும். YouTubeல் கன்னா பின்னாவென்று (நல்ல) காட்சிக் கோப்புகளைப் பார்க்க பழகிக் கொள்ள வேண்டும். "எனக்கு அதிலெல்லாம் அவ்வளவா interest இல்லீங்க" என்பவர்கள், என்னைப் போல பதிவர் ஆக வேண்டும் (சும்மா, தமாசுக்கு). எதுவும் இல்லைஎன்றால், பிடித்து வைத்த பிள்ளையார் என்பார்களே, அது போல ஆக வேண்டும் வீட்டுக்கு வந்து விட்டால்.

மடிக்கணினி என்னிடம் இல்லாத காலம் அது. ஆன்-சைட் போய் விட்டு வந்த ஒரு நண்பனின் கணினியை பயன்படுத்துவேன். அவனோ, அலுவலகத்திலிருந்து திரும்பிய பின், அதை சீண்டவே மாட்டான். கேட்டால், "இத கட்டிக்கிட்டுதான் ஒரு வருஷம் குடும்பம் நடத்துனேன். இங்கேயுமா. வேண்டாண்டா சாமி" என்றான். இப்போது கல்யாணம் ஆகி விட்டது. மடிக்கணிணியே பரவாயில்லை, வேண்டாமென்றால் அமர்த்தி விடலாம். ஆனால், சரி விடுங்க பாஸ்.

இன்னொரு மிக முக்கியமான, முதல் முறை வரும்போது தவிர்க்க முடியாத விஷயம், பணப் பரிமாற்ற விகிதம் (Conversion). எதை எடுத்தாலும், மனம்  உடனே, அதை ஐம்பதால் பெருக்கி, நம்மூரில் அது எந்த விலை என்று பார்த்து, 'வேண்டாம்' என முடிவு செய்து விடும். நான் இது வரை பார்த்த வரை, நம்மூரை விட குறைந்த விலை பார்த்தது பெப்சி போன்ற குளிர் பானங்களில்தான். (இது கொஞ்சம் இல்ல ரொம்பவே அதிகம் என்கிறீர்களா, நான் தினசரி உபயோகம் பற்றி மட்டும் சொன்னேன்)

இன்னொரு கொடூரம், நம்மூரைப் போல, மேலே சூரியனைப் பார்த்து மணி என்னவென்று கணித்தீர்கள் என்றால், காலிதான். இப்போதுதான் கோடைக் காலம். காலை ஐந்தரை மணிக்கே சூரியன் பிரகாசமாக உதித்து விடும். "லேசா இருட்டு கட்டுதே, ஆறரை இருக்கும்" என்று என்னும்போது மணி ஒன்பதரைக்கு மேல் ஆகி இருக்கும். இது அப்படியே தலை கீழாக பனிக்காலத்தில் இருக்கும் என்றனர். முடியலை.

நேர மண்டலம். இங்கு மட்டும் மொத்தம் நான்கு நேர மண்டலங்கள் உள்ளன. சரி, நம்ம நண்பன் ஒருத்தன் அமெரிக்காவில் இருக்கானே, என்று இரவு பத்து மணிக்கு அழைத்தால், அவனோ "டேய், இங்க மணி பனிரெண்டுக்கு மேலாச்சுடா, இது Eastern டா, தூங்க விடுடா" என்று கத்தினான். என்ன கொடுமை சரவணன் இது

இது பற்றி, நமது சக பதிவர் பாலா, விலாவரியாக புட்டு, புட்டு வைத்துள்ளார். அவரது "பிரமச்சாரிகளுக்கு" என்ற பதிவு மிக மிக பிரபலமானது. கல்யாணத்திற்கு முன், வீட்டில், அவர் சொன்னது போலவே, பல பிட்டுகளை போட்டுள்ளேன். சரி விடுங்க. அவரது ஆன்-சைட் பதிவில், கடைசியில் உள்ள பன்ச், "ஆன்சைட்ன்றது பப்ளிக் டாய்லெட் மாதிரி, உள்ள இருக்கறவன் வெளிய வரனும் நெனப்பான், வெளிய இருக்கறவன் உள்ள போகனும் நெனப்பான்." இதை மட்டும், அவரது உத்தரவின்றி பயன்படுத்திக் கொள்கிறேன். மன்னிப்பாராக!

கிளம்புவதற்கு முன், அனைவருமே சொல்வது "என்னால அங்க ரொம்ப நாள் எல்லாம் இருக்க முடியாது. எவ்ளோ சீக்கிரம் முடியுமோ, அவ்ளோ சீக்கிரம் வந்துடுவேன்" என்பதுதான். சொன்ன அனைவருமே, சென்ற ஒரு வருடம் கழித்து, ஏதாவது சாக்கு போக்கு சொல்லி, இன்னும் தங்கிக் கொண்டே இருப்பர். பணம். வந்த பிறகு, கையில் புரளும் பணத்தைப் பார்த்தவுடன், "இன்னும் கொஞ்ச நாள், இன்னும் கொஞ்ச நாள்" என்று மனம் அரிக்க ஆரம்பித்து விடும் (இது எனக்கும் பொருந்தும்). குடும்பத்துடன் இங்கு வந்தவர்களோ, (மனைவி, குழந்தை, பார்த்துக்கொள்ள தனது தாய், தந்தை) கொஞ்ச நாள் சமாளிக்க முடியும். பின்? கிட்டத்தட்ட இருபத்தைந்து வருடங்கள் ஒரு வாழக்கை முறையிலும், பின் ஓரிரு வருடங்கள் வேறொரு வாழ்க்கை முறையிலும் வாழ்ந்து விட்டு, இரண்டையும் விட முடியாமல் துன்பப் படுபவர்கள் நிறைய.

பெற்றவர்கள் இருக்கும்போது எங்கேயோ போய் விட்டு, இல்லாத போது "ஐயோ கடைசி நேரத்தில பக்கத்துல இல்லையே" என்று கதற வேண்டியது. உறவினரின் நண்பருக்கு நடந்தது எனக் கேள்விப்பட்ட விஷயம். அவரது அம்மா, அமெரிக்காவில் அவருடன் இருக்கும்போது திடீரென இறந்து விட்டார். ஊருக்கு செல்ல நிறைய பணம் கட்ட வேண்டியிருந்தது. அதைக் கட்டுவதற்குள், உடல் எடுத்துச் செல்ல முடியாத நிலையில் உள்ளது, எங்கே எரிக்க வேண்டும் என நிர்ப்பந்தம். வேறு வழியின்றி, அங்கேயே எரித்து விட்டு, அஸ்தியோடு நின்றாராம்.

எனது நண்பன் ஒருவன், அமெரிக்காவில் இருந்தே Skypeல் அவனுடைய நிச்சயதார்த்தத்தை செய்தான். அதை பெருமையாக வேறு பிரபலப்படுத்தினான். இங்கு, குடியுரிமைக்கு காத்திருக்கும் ஒருவரிடம் பேசும்போது சொன்னார். "பணம், சொந்த ஊர்ல பேரு. லீவ்ல ஊருக்கு போனோம்னா, கெடக்கிற மரியாதையே வேற. நாம ஊர்லயே இருந்தோம்னா, அட அவனா, இங்கதான்பா இருக்கான். எப்போ வேணா பாத்துக்கலாம் என்பார்கள்." நாம் எதை இழக்கிறோம் என்பது இழந்த பின்தான் தெரியும். நாம் சந்தோசமாகத்தான் இருந்தோம் என்பது அது இல்லாத போதுதான் உரைக்கும்.

சென்னையில் இருந்து, ஏதாவது என்றால் ஊருக்கு செல்ல, குறைந்த பட்சம் ஏழு மணி நேரமாவது ஆகிறது. அதற்குள் ஏதாவது நடந்து விடுமோ என மனது துடிக்கிறது. என் அம்மா, சென்னையில் இரண்டு நாட்கள் இருந்து விட்டு, "என்ன ஊரடா இது, எப்படித்தான் இருக்கீங்களோ, முடிஞ்சளவு ஊர்ப்பக்கம் ஏதாவது வேலை பாத்து வந்திரு" என்றார். இதற்குதான், அப்போதே மாடு மேய்க்க போயிருக்க வேண்டும். என்ன செய்ய.

இவ்வளும் புலம்பி விட்டு, வாய்ப்பு கிடைத்தால் நானும் இங்கு இருப்பேன். என்ன செய்ய. ஒன்றை இழந்தால்தான் ஒன்றைப் பெற முடியும். எதை இழந்து எதைப் பெற வேண்டுமென்று நாம்தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால் ஒன்று, எதை செய்தாலும் "ஒரு வேளை, அந்த முடிவையே எடுத்திருக்கலாமோ" என்று புலம்பத்தான் செய்வோம். மனித மனம்.

Monday, June 18, 2012

ஆன்-சைட் அமெரிக்கா 1


என் புருஷனும் கச்சேரிக்குப் போனான் என்பது போல், என் தங்கமணி கூட 'எங்க ரங்கமணி ஆன்-சைட் போயிருக்காரு' என்று சொல்ல வேண்டிய காலம் வந்து விட்டது. காலம் போன காலத்தில் நம்மை அனுப்பி படாத பாடு படுத்துகிறார்கள். எப்படியோ நானும் 'அமெரிக்கா' வந்து விட்டேன்.

அதற்காக முதலில் விசா நேர்காணலுக்கு அனுப்பும்போதே பயங்கரமாக தயார் செய்தனர். 'கண்ணைப் பார்த்து பேசு, மசால் கோட்டை தாண்டாமல் நில், பயப்படாமல் பேசு, ஆரம்பிக்கும்போதும், முடிக்கும்போதும் நன்றி சொல்' எனப் பலப் பல விஷயங்கள். அங்கு என்னடாவென்றால் கல்யாணம் ஆகி விட்டதா என்று சம்பந்தமே இல்லாமல் கேட்டு விசா கொடுத்து விட்டனர்.

சரி, அலுவலகத்தில், இதோ அதோ என்று இழுத்தடித்து, கடைசியில் கிளம்ப வேண்டும் என்று நிச்சயமாக தெரிந்த பின், மூன்று மாதத்திற்கு தேவியான அரிசி, தொக்கு, ரெடி மிக்ஸ் என்று பலப் பல விஷயங்களை தயார் செய்ய வேண்டும். அதற்கு அங்கிருந்து திரும்ப வந்த நண்பர்களின் உதவி மிக முக்கியம். அவர்களின் உதவியோடு எல்லாம் வாங்கி, ஆயத்தப்பட வேண்டும்.

விமானத்தில், நினைத்தது போலவே, உலக வரலாற்றில் முதல் முறையாக எனக்கு அருகில் ஒரு அழகிய வெளிநாட்டு இளம் பெண். ஆனால், அதற்கு அந்தப் பக்கம், நம்மாளு. "அவருக்கு இதாம் மொத தடவையாம். சீட் பெல்ட் போட தெரியாதாம்." அட பக்கி. அதுக்கப்புறம் அவன் போட்ட கடலைல அந்த பொண்ணே கடுப்பாகி சீட் மாறி போயிடுச்சி.

இறங்கிய பின், ஓரிரு நாட்கள் கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போலவே இருந்தது. பேசுவதும் புரியாமல், என்ன செய்வதென்றும் தெரியாமல். அதன் பின்புதான் ஓரளவு தெளிவானது. என்னதான் நிறைய படித்திருந்தாலும், நண்பர்கள் மூலம் கேள்விப் பட்டிருந்தாலும், நேரில் காணும்போது உண்மை கொஞ்சம் உறைக்கத்தான் செய்கிறது.

விதிகளை மதிக்கும் பண்பு. அதில் பயத்தை விட நிறைய மரியாதையே உள்ளது போல படுகிறது. ஏற்கனவே நம்மூரில் சாலை நடைமுறையைப் பற்றி குமுறி இருக்கிறேன். வேலையை சரியாக செய்தவுடன் மனமுவந்து பாராட்டுகிறார்கள். நம்மூரில் தலை கீழாக நின்றாலும் அது நடக்காது.யாராக இருந்தாலும் மதிக்கும் குணம். குழந்தைகளுக்கும் ஏன் விலங்குகளுக்குக் கூட நிறைய மரியாதை. இருந்தாலும் திருஷ்டி இல்லாமலா? ஒரு சில பேர் நம்மைப் பார்த்தாலே, ஏதோ வாந்தி வருவது போல முகம் மாறுவது. நம்மைப் பார்த்து புன்னகை செய்தாலும், ஏதாவது உதவி கேட்டால் ஒதுங்கி விடுவது (என்னுடைய அனுபவம்). அதிலும் இங்கு ரொம்ப நாளாக இருக்கும் நம்மாட்களோ, அவர்களே பரவாயில்லை எனும்படி ஆக்கி விட்டார்கள். தமிழில் பேசுகிறார்களே என்று "எப்படி இருக்கீங்க" என்றால் "Doing Good" என்று சொல்லி விட்டு ஓடி விடுகிறார்கள்.


இன்னொரு மிக முக்கியமான விஷயம். கலாச்சாரம் என்று ஏதோ உண்டாமே. நமக்கே அது கிட்டத்தட்ட காணாமல் போய் விட்டது. இங்கே என்னுடைய வெள்ளைக்கார அதிகாரி தன்னுடைய குடும்ப புகைப்படத்தைக் காட்டி (நம்மூரில் அது எப்போது நடக்காது) அது என்னுடைய பெண், பக்கத்தில் இருப்பது அவளுடைய 'Boy Friend' என்றார். நமக்குத்தான் எவ்வளவோ கேள்விப்பட்டிருந்தாலும், படித்திருந்தாலும் சற்றே 'சுரீர்' என்றது.


இன்னொரு முக்கியமான தகுதி, கார் ஓட்டுவது. இல்லையெனில் யாரையாவது நம்பிக்கொண்டு இருக்க வேண்டியதுதான். வீடியோ கேமில் ஓட்டுவது போல சுலபம்தான் என்றாலும், விதிகள்தான் மிகவும் முக்கியம். எனக்கு மூன்று மாதம்தான் என்பதால் பிரச்சினை இல்லை.

எல்லாம் எங்களுக்குத் தெரியும், நாங்களும் அமெரிக்கா போயிருக்கோம் என்பவர்களுக்காக, "நானும் போயிருக்கேன். இத வச்சி ஒரு பதிவு போடலாமுன்னுதான்.. வேற ஒன்னுமில்லீங்கோ"



Tuesday, June 5, 2012

(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்

அனைவருக்கும் வணக்கம். இந்த நான்கு மாத கால இடைவெளியை பூர்த்தி செய்ய, அடிக்கடி பதிவு போட வேண்டும் என்று எண்ணியுள்ளேன். பார்ப்போம். நினைத்ததெல்லாம் நடந்து விட்டால்..

கஹாணி. சமீபத்தில் மிகவும் ரசித்த திரைப்படம். பாகிஸ்தானில் இருந்தும், சீனாவில் இருந்தும் வரும் தீவிரவாதிகள், சண்டை, பாடல்கள் எதுவும் இல்லாத, ஆனாலும் ஒரு அருமையான ரசிக்கும் வகையில் இருந்த திரைப்படம். மௌன குருவை விட அட்டகாசமான திரைப்படம். உண்மையிலே இது போன்ற திரைப்படங்களை அப்படியே ரீமேக்கினால், உண்மையிலேயே 'ஒஸ்தியாக' இருக்கும். கொல்கத்தாவில், மெட்ரோ ரயிலில் நடக்கும் விபத்து. காணாமல் போன கணவனைத் தேடி வரும் இளம்பெண், சாதாரண அரசாங்க ஊழியர்கள் போர்வையில் நாட்டுக்கு நல்லதும் கெட்டதும் செய்யும் ஆட்கள் என்று பல முடிச்சுகள் போட்டு, இறுதியில் அட்டகாசமான முடிவு உள்ள படம்.

டெல்லி பெல்லி. என்ன தைரியத்தில் இந்த படத்தை தமிழில் எடுக்கிறார்கள் என்றே தெரியவில்லை. கருவை மட்டும் வைத்துக் கொண்டு, தமிழுக்கேற்றவாறு கலாசாரம் கெடாமல் எடுக்கிறோம் என்றால் சாதாரண மசாலா படத்தை விட கேவலமாக இருக்கும். பார்க்கலாம். ரசிக்கும் படி இருந்தால், உண்மையிலேயே மிகவும் சந்தோஷம்.

மற்றபடி, ஒரு கல் ஒரு கண்ணாடி, வழக்கு எண் என பல படங்கள். வழக்கு எண், வழக்கத்திலிருந்து சற்றே மாறுபட்டிருந்த படம். ஆனாலும், காட்சிகள் அந்தந்த பாத்திரங்களின் பார்வையில் வந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். OK OK ஓகே. கலகலப்பு கல கல. மற்றபடி எதுவுமில்லை.

ரொம்ப நாள் முன், சன் டிவியில் ரமணி vs ரமணி என்ற தொடர் வந்தது. யாருக்காவது நினைவில் உள்ளதா என்று தெரியவில்லை. அப்போது அவ்வளவாக புரியவில்லை என்றாலும் எனக்கு பார்க்க மிகவும் பிடிக்கும். அது ஹிட் என்பதால் இரண்டாம் பாகம் கூட வந்தது. ஆனால், அது அவ்வளவாக எனக்குப் பிடிக்கவில்லை. இப்போது முதல் பாகம் பார்க்கும்போதுதான் புரிகிறது. கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு முன்பே, இப்போதுள்ள தம்பதியர் எப்படி இருப்பார்கள் என்பதை தெளிவாக காட்டியிருப்பார்கள். நாகா இப்படியெல்லாம் எடுத்து விட்டு பின் ஏன் 'ஆனந்தபுரத்து வீடு' என்ற மொக்கை படத்தை எடுத்தாரோ தெரியவில்லை.

கணவனை வாடா போடா என அழைப்பது, சமையல் தெரியாமல் தினமும் வெளியில் சாப்பிடுவது, பள்ளியறைக்கு செல்லப் பெயர், விளம்பர நிறுவன வேலை, ICICI வங்கி வேலை, கிரெடிட் கார்டு, கைப்பேசி, 'க்ளப்டோமேனியா' போன்ற சொற்கள் (இது பற்றி தெரியவில்லையெனில், கண்களால் கைது செய் படம் பார்க்கவும்). தாலியை கழற்றி வைப்பது என பல அட்டகாசங்கள். அதிலும் குறிப்பாக, கீழே வரும் பகுதி எனக்கு மிகவும் பிடித்தது.


கற்பனை கையாடல். இதைப் பார்த்தவுடன் உங்களுக்கு ஏதாவது திரைப்படம் நினைவுக்கு வரலாம். எனக்கு அலை பாயுதே நினைவுக்கு வந்தது. அதே போல சுஜாதாவின் 'நிர்வாண நகரம்' படித்தவர்களுக்கு 'மௌன குரு' படம் பார்க்கும்போது நினைவுக்கு வந்திருக்கலாம். (பொது தொலைப்பேசியை உடைக்கும் காட்சி). இதே போல, ரமணா படத்தில் வரும் மருத்துவமனை காட்சி, ஒரு ராஜேஷ் குமார் நாவலில் வரும். இதைப் பற்றி முன்பே எழுதி உள்ளேன். இவை அனைத்துமே படத்தின் கதைக்கு அவ்வளவாக சம்பந்தமில்லாத காட்சிகள்தான். ஆனாலும், அவற்றின் உண்மையான உரிமையாளர்கள் சரியான முறையில் அங்கீகரிக்கப்படவில்லை என்பது என் எண்ணம். இதனால் அந்த இயக்குனர்களின் மேல் சிறிய வருத்தமும், சற்றே சந்தேகமும் கூட வருகிறது. ஏதேனும் நல்ல காட்சிகள் பார்க்கும் போது 'எங்கிருந்து சுட்டிருப்பார்களோ' என்று. கலப்பு படத்தில் கூட சந்தானம் வரும் காட்சிகள் எனக்கு 'கண்டேன் காதலை' படத்தை நினைவூட்டியது. முறைப்பெண், தாத்தா. என்னவோ போங்க.

இன்னொரு வருத்தமான நிகழ்வு. ஆனந்த விகடன் - மதன் பிரிவு. இதில் உள்குத்தாக நிறைய விஷயங்கள் நடந்திருக்கும். நஷ்டம் என்னவோ நமக்குத்தான் என்று சொல்ல முடியாது. கூடிய விரைவில் 'ஓ பக்கங்கள்' போல குமுதத்திலோ, கல்கியிலோ அல்லது 'அம்மா' சார்பில் ஆரம்பிக்கும் வார இதழிலோ 'மதன் பதில்கள்' வரலாம். காத்திருப்போம்.

Sunday, May 6, 2012

என்ன வாழ்க்கடா இது??


அடடடா.. ஒரு பதிவு போடலாம்னு நெனச்சு, அத எழுதி பதிவிட படாத பாடு பட வேண்டி இருக்கப்பா.. என்ன எழுதன்னே தெரியலே.. உலகத்தில நெறைய விஷயங்கள் நடக்குது. ஆனா நமக்குத்தான் ஒன்னும் சிக்க மாட்டிங்குது.. கொடுமையடா..மனசுல நெறைய இருக்கு.. அத எழுதனும்னு உக்காந்தா, அந்த எழுத்துதான், வார்த்தை வர மாட்டேங்குது.

தலைவலியும் திருகுவலியும் தனக்கு வந்தால்தான் தெரியும்.. தினசரி நிறைய மரணங்கள் பற்றி படிக்கிறோம்.. பார்க்கிறோம்.. "அவ்வளவுதான்.. போய்ட்டாங்க.. இனிமே அதப்பத்தி பேசி என்ன ஆகப் போவுது.. ஆக வேண்டிய வேலையைப் பாருங்க.. May his/her soul Rest In Piece" என்று எண்ணி விடுகிறோம்.. முதல் முறையாக ஒரு மரணம்.. பிரிவை உணர்த்திய இழப்பு.. எனது அத்தை.. அப்பாவின் தங்கை. மிக சாதாரணமாக ஒரு ஞாயிறு அன்று, "சரி அடுத்த வாரம் பாக்கலாம்" என்று சொல்லி விட்டு வந்து தூங்கியவன், அதிகாலையில் எழுப்பியது அந்த செய்திதான். மாரடைப்பு..

திருமணத்திற்கு பிறகு, உயிர் பயம் மிக மிக அதிகமாகி விட்டது.. நம்மை நம்பி ஒரு உயிர்.. அந்த உயிருக்குள் ஒரு உயிர்.. முன்பெல்லாம், சாலையில் மிக சாதாரணமாக சில்லறை வாறி "அதெல்லாம் ஒண்ணுமில்ல மச்சான்.. டக்குனு போயிரலாமுன்னு நெனச்சேன்" என்றெல்லாம் பீலா விட்டுத் திரிந்த காலம். இப்போது எல்லாம் சாலை விபத்தில் வாலிபர் பலி என்றாலே உடம்பு உதறல் எடுக்கிறது..

அதிகாலை 6 மணிக்கெல்லாம் சிக்னல் போட்டு விடுகின்றனர். அதை யாரும் மதிப்பதுமில்லை. சிக்னல் இல்லையென்றால் கூட, வலது பக்கம் திரும்பும்போது இரு பக்கமும் பார்த்து திரும்புவார்கள். ஆனால், வேகமாக வரும்போது, பச்சை எரிந்தால், வந்த வேகத்தில் திரும்ப வேண்டியது, அந்த பக்கம் இருந்து எவனாவது வந்தால், "நான் நல்லவன்பா" என்ற நினைப்போடு போக வேண்டியதுதான். ஒரு சில நண்பர்களின் மேல் இதனால் எனக்கு கோபம் கூட உண்டு.. சிக்னலை மதிக்காதது, ஆம்புலன்ஸ் போனால், அதன் பின்னாலேயே ஒட்டிக்கொண்டு போக வேண்டியது..

தினமும் எத்தனையோ தவறுகள் உலகில் நடக்கின்றன.. ஊடகங்கள், திரைப்படங்கள் என்று வேறு வேறு பெயர்களில், வேறு வேறு இடங்களில் நிறைய.. 'அந்நியன்' படம் பார்க்கும்போது சிரித்தேன். "இதெல்லாம் ஒரு மேட்டர்னு கொலை செய்யலாமா" என்று. ஆனால், இதையே கீழ்க் கண்ட தினமணி கார்டூனும் நிரூபிக்கிறது.


"மொதல்ல சிக்னல மீறற எல்லரையும் என்கவுண்டர்ல போடுங்க சார். இவனுங்களைவிட பெரிய பயங்கரவாதிகள் நாட்லே யாரும் கிடையாது"


இதையெல்லாம் எப்படி தடுப்பது. யார் யார் தவறு செய்கிறார்கள்? நான் அலுவலகம் செய்வது அசாதாராண நேரம். அந்த நேரங்களில், மஞ்சள் நிற நம்பர் பிளேட்காரர்கள் யாருமே இல்லாத அந்த சாலையில் சிக்னலுக்காக நிற்பதையும் பார்த்திருக்கிறேன். இருக்குமதி செய்யப்பட்ட 'பேன்சி' நம்பர் கொண்ட வண்டிகள் மீறுவதையும் பார்த்திருக்கிறேன். அனைவருக்கும் 'இது நம்மூரு' என்ற எண்ணமா என்று தெரியவில்லை.

இப்போதுதான் விதிகளை மீறுவோருக்கு கடுமையான தண்டனை/அபராதம் என்றனர். ஆனாலும் ஒன்றும் குறையவில்லை. அதுதான் அணைத்து இடங்களிலும் கேமரா உள்ளதே. வெளிநாடுகளைப் போல, அவ்வப்போது அதைப் பார்த்து அதில் விதிகளை மீறுவோருக்கு நோட்டிஸ் அனுப்பினால் கூட கொஞ்சம் பயம் வருமே. கொஞ்ச நாள் இதை செய்தால் கூட நன்றாக இருக்கும். குறிப்பாக மாநகராட்சி பேருந்து ஓட்டுநர்களுக்கும், அரசு வாகனங்களுக்கும் கூட. இது நடக்க சாத்தியமே இல்லைதான்.


வேளச்சேரியில் இருந்து தரமணி போகும்போது, எதிரில் Wrong sideல் வேகமாக வரும் வண்டியைப் பார்த்து பயந்து ஓரமாக ஒதுங்கும்போதும் சரி. வேளச்சேரி புறவழிச்சாலையில் இருந்து, குருநானக் கல்லூரிக்கு திரும்ப அதிகம் 12 வினாடிகள் கொடுப்பார்கள். அதற்கும் இடம் தராமல், இரு பக்கமும் வண்டி போகும்போது தடுமாறி அந்தப் பக்கம் செல்லும்போதும் வண்டி ஓட்டும் அன்பர்கள் அசிங்கமாக சொல்லுவார்கள் "ஏண்டா பேமானி. பாத்து வர மாட்ட?" அப்போது மட்டும் சற்றே சத்தமாக கத்துவேன். கேட்குமோ என்னவோ தெரியாது.

"நீங்க போய் உலகத்த காப்பாத்துங்க. எனக்கு அவசர வேல எதுவும் இல்ல".


எப்படியாக இருந்தாலும், மக்களுக்கு பயம் வர வேண்டும். எனக்கு உள்ளது. இனி கண்டிப்பாக நான் நல்லவனாக இருப்பேன். அனைவருக்கும் பயம் வர வேண்டுமா? சட்டம் தன் கடமையை முறையாக செய்ய வேண்டும். அல்லது, வாகன ஓட்டிகள் அனைவரும், தங்கள் மனதிற்கு பிடித்தவர்களோடு ஒரு நாள் முழுதும், நீங்கள் எப்போதும் ஓட்டுவதுபோல போய் வாருங்கள். பயம் வரலாம். அப்படியே கொஞ்சம் ஐந்து நொடிகள் பொறுமையும்.

Sunday, January 1, 2012

(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்

அனைவருக்கும் வணக்கம்.. நீண்ட நாட்களுக்குப் பின் சந்திக்கிறேன். இதுவரை சாதாரண மணியாக இருந்த நான், இப்போது ரங்கமணியாகிப் போனதுதான் கடந்த சில மாதங்களாக பதிவிட முடியாததற்குக் காரணம். அனைவரும் மகிழ்ச்சியோடு இருந்திருப்பீர்கள் என நம்புகிறேன். நான் இப்போது மீண்டு(ம்) வந்து விட்டேன். இனி பின்னிப் பெடலெடுக்க வேண்டியதுதான் (முடியாது என்றாலும். நாங்க நேத்து ஒரு பேச்சு இன்னைக்கி ஒரு பேச்சு கிடையாது).சாதா மணியாக இருந்த போது சுதந்திரமாக இருந்தேன் என்று இப்போதுதான் புரிகிறது. அப்போது, "எப்ப பாத்தாலும் பசங்களோட சுத்திக்கிட்டே இருக்கமே, நமக்கு ஒன்னு கெடக்காதா?" என்று திரிந்தது நினைவுக்கு வருகிறது.என்ன செய்ய. அக்கரைப் பச்சை.

கடந்த வருடம், மிக நன்றாகவே போனது. வழக்கம் போல மேடு பள்ளமாக இருந்தாலும், வாழ்க்கையின் அடுத்த படிக்கு போய் விட்டபடியால், மிக மிக சந்தோசமான வருடம்தான். புது வேலை, புது பைக், புது பொண்டாட்டி.., கலக்குறே அரவிந்த். சரி. தங்கமணி அவரசமாக அழைப்பதால், நானும் என்னைக் கவர்ந்த, கவலைப்பட வைத்த சில விஷயங்களைப் பற்றி மட்டும் சொல்லி விடுகிறேன்.

வருட ஆரம்பம் அப்படி ஒன்றும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை என்றாலும், போக போக நன்றாகவே இருந்தது. கடைசியில் சூடு பிடித்து, 'தானே' வந்து சரி செய்யும் நிலை ஆகிவிட்டது. குறிப்பாக இந்த வருடம் மக்கள் எழுச்சி அதிகமாக உள்ளது. தேவைப்பட்டால் நாங்களும் போராடுவோம் என்று மக்கள், தங்களுக்காக மட்டுமல்ல, மற்றவர்களுக்காகவும் போராடுகின்றனர். அந்த கோடான கோடியில் நானும் ஒருவன் என்பதை, சற்றே தாழ்ந்த பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். பொதுவான பாத்திரத்தில், முழுதும் தண்ணீரை ஊற்றாமல், கொஞ்சம் பாலும் சேர்த்து அனைவரும் ஊற்றுவதால், மொத்தமாக பால் போல தெரிகிறது. அதுவும் நல்லதுக்குத்தான். நாம் ஒற்றுமையாவது நமது சகோதரர்களுடன் சண்டை போடவா என்று சலனப்பட்டாலும், நம்மை ஒற்றுமையாக்கியதற்கு அவர்களுக்கு நன்றி. எப்போதும், மனிதம், தேசியம், இனம் என்றுதான் மனிதனுக்கு உணர்வு இருக்க வேண்டும். அப்போதுதான் சமுதாயம் கட்டுக்குலையாமல் இருக்கும். ஒன்றே ஒன்று மட்டும் எப்போதும் மாறாமல் இருப்பது.தமிழன் எப்போதும் அடுத்தவன் அழிந்து தான் வாழ வேண்டும் என்று நினைக்க மாட்டான், இதுவரை தான் அழிந்துதான் மற்றவர்களை வாழ வைத்துள்ளான்.இங்கு யாரும் யாருக்கும் இளைத்தவர்கள் அல்ல. இதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். நல்லாருப்போம் நல்லாருப்போம் எல்லோரும் நல்லாருப்போம். சரி, கொஞ்சம் வேறு மாதிரி போய் விட்டோமோ? விடுங்க, விடுங்க.. என்னைக் கவர்ந்த சில படங்கள் பற்றி மட்டும் சொல்லி விட்டு 'எஸ்' ஆகிறேன்.

பார்த்து ரசித்த படங்கள்:

காவலன்
சிறுத்தை, வானம் (ஒரிஜினல் பார்த்திருந்தாலும், சந்தானத்துக்காக)
பயணம்
குள்ள நரிக்கூட்டம்
கோ
காஞ்சனா
மங்காத்தா
முரண்

பார்த்து நொந்த படங்கள்:

நடுநிசி நாய்கள்
அவன் இவன்
180
வந்தான் கொன்றான், மன்னிக்க வென்றான்
ஏழாம் அறிவு (தங்கமணியுடன் முதல் படம்)
வேலாயுதம் (இரண்டாவது)
ராஜ பாட்டை(மூன்றாவது)
விதி என் வாழ்வில் எப்படியெல்லாம் விளையாடுகிறது பார்த்தீர்களா??

தவற விட்டதாலேயே தப்பித்தவை:

இளைஞன்
எங்கேயும் காதல்
வேங்கை
ரௌத்திரம்
வெடி
வித்தகன்
ஒஸ்தி

தவற விட்டு தவறாக ரசித்தவை (வீட்டுலதான்) / ரசிக்க வேண்டியவை:

நர்த்தகி
உயர்திரு 420
வெங்காயம்
வாகை சூட வா
சதுரங்கம்
வர்ணம்
தம்பி வேட்டோத்தி சுந்தரம்
மம்பட்டியான்
உச்சிதனை முகர்ந்தால்
பாலை
மயக்கம் என்ன
போராளி

பார்த்த பின் அனுபவித்தவை / அனுபவித்துப் பார்த்தவை:

ஆடுகளம்
யுத்தம் செய்
ஆரண்ய காண்டம்
அழகர்சாமியின் குதிரை
தெய்வத் திருமகள் (சாராவுக்காக)
எங்கேயும் எப்போதும் (சாதா மணியாக கடைசி படம். இயக்குனர் நாமக்கல்காரர் என்பதில் எச்சகச்ச, மன்னிக்க, எக்கச்சக்க பெருமை :-) )
வாகை சூட வா
மௌன குரு (என் தங்கமணி கூறியது, "இந்த ஒரு படத்துக்காக, மத்த மூணு படத்துக்கு கூட்டிட்டு போனத மன்னிச்சு விடுறேன்".)

மக்களே.. அனைவருக்கும் இந்த வருடம் போன வருடத்தை விட நன்றாக அமையும். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்...