Tuesday, February 5, 2013

விமர்சனம் 2013!!

இந்த வருடம் இதுவரை வந்த படங்கள், ஒரு பார்வை. ரம் பம் பம் ஆரம்பம். சரி சரி ஓடாதீங்க. 

அலெக்ஸ் பாண்டியன்: இந்தப் படத்தை அனைவரும் கழுவி கழுவி ஊற்றி, நன்கு சுத்தமாக இருப்பதால், நான் எதுவும் சொல்லவில்லை. ஒரு சில கீச்சுக்கள் மட்டும்.

"அலெக்ஸ் பாண்டியனுக்கு நம்ம வடிவேலோட டெலெக்ஸ் பாண்டியன் எவ்வளவோ மேல். 

டிரீம்வொர்க்ஸ் அனிமேஷன்ஸ், ஸ்டுடியோ கிரீன் மீது வழக்கு. அலெக்ஸ் பெயருக்கு களங்கம் உண்டாக்கியதாக."


இந்த படம் வெளிவர, மற்ற படங்களைத் தடுத்ததாக சில செய்திகள். சூர்யா, கார்த்தி மீது ஒரு நல்ல எண்ணம் இருந்து வருகிறது. அந்த எண்ணம் போனால் எனக்கென்ன, இருந்தால் எனக்கென்ன என்கிறீர்களா. சரிதான். ஆனால், என்ன ஆகும் என்றால், தியேட்டர் போய் படம் பார்க்கும் எண்ணம் போய் விடும். சரி போகாதே என்கிறீர்களா.

சமர்: ஒரு வித்தியாசமான திரில்லர். இதையும் 'The Game' படத்தின் தழுவல் என்றெல்லாம் பதிவுகள். நான் என்ன நினைக்கின்றேன் என்றால், அங்கெல்லாம் போக வேண்டாம். "மேனியெல்லாம் சிறகுகள்" என்ற சுபாவின் கதை உள்ளது. அந்த புத்தகம் என்னிடம் இப்போது காணவில்லை. இல்லையெனில் அது எப்போது எழுதப்பட்டது என்பதையும் சொல்லியிருக்கலாம். அதுவும் இதே போல மனித உணர்வுகளுடன் ஆடும் விளையாட்டுதான். அதில் காட்டில் நடக்கும். இதில் வெளிநாட்டில் நடக்கிறது.

கண்ணா லட்டு தின்ன ஆசையா: பாக்கியராஜ் தனது மகனை வைத்து 'ரீமேக்' செய்ய திட்டமிட்டதாக சொன்னவுடன், "சார், உங்க பையன், உங்க கதை, நீங்க எடுக்கலாம், எங்கள பாத்தா உங்களுக்கு பாவமா இல்லையா?" என்றுதான் கேட்க தோன்றியது. நல்லா யோசிச்சுப் பாருங்க சார், நீங்க ஒரு தகப்பன் ஆனா பின்பு, இயக்குனரா உங்களால வெற்றி பெற முடியல. வேணாம் சார். எல்லோரும் நல்லாருப்போம். விட்ருங்க.

எனக்கென்னவோ, சந்தானம் முதலிலேயே பாக்யராஜிடம் போய், "சார் நீங்களே இயக்குங்க" என்று மட்டும் சொல்லியிருந்தால், படம் இன்னும் பயங்கர வெற்றி அடைந்திருக்கும் என்று தோன்றுகிறது. இருந்தாலும், பவரின் பவரால் வெற்றி.

கடல்: 'கடல் உள் வாங்கிருச்சாமே, கடல் - டல், கடல் அல்ல, கலங்கிய குட்டை, அடடே, கடலையே கழுவி கழுவி ஊற்றுகிறார்களே, கடல் பாத்ததுக்கு என்னைத் தூக்கி கடலில் தூக்கிப் போட்டிருக்கலாம், ரஹ்மான் என்ற கட்டு மரம் மட்டும் இல்லாவிட்டால், கடலில் மூழ்கியிருப்பேன்', என்று கடல் படத்தை அனைவரும் சொல்லிவிட்டார்கள்.

இருந்தாலும், எனக்கு பிடித்த ஒரு விமர்சனம், இன்னும் சொல்லப் போனால் ஒரு பன்ச். நம்ம அக்கிலீக்ஸ் அண்ணாச்சியோடதுதான்.

"கடல் பார்க்கணும்னு நினைக்கிறவங்க மெரினாவுகோ இல்லை வேற ஏதோ பீச்சுக்கோ போய் பார்த்துக்கோங்க. எங்க ஊர்ல பீச் இல்லன்னு சொல்றவங்க கடல் போட்டோவ வெறிச்சு வெறிச்சு பாத்துக்கோங்க ஆனா தியேட்டர் பக்கம் மட்டும் போய்டாதீங்க"


கீழே ஒரு கணக்கு உள்ளது. கூட்டிக் கழிச்சி விடை சரியா. சொல்லுங்க.

அர்ஜுன்+மம்முட்டி = வந்தே மாதரம், மொக்கை
மம்முட்டி+அரவிந்த் சாமி = புதையல், மகா மொக்கை.
அரவிந்த் சாமி+அர்ஜுன் = கடல், மரண மொக்கை.

எப்படி பாத்தாலும், நாமதான் பாவம் போலிருக்கே.

டேவிட்: 'ஒரு வீடு இரு வாசல்' படத்திற்கும், இதற்கும் என்ன வித்தியாசம்? அதில் முதல் கதை முழுதும் முடிந்த பின் இரண்டாம் கதை வரும். கடைசிக் காட்சியில் இரண்டு கதைகளும் இணையும். இந்தப் படத்தில் நான் லீனியர், அதாவது மாறி மாறி வருகின்றன. மற்றபடி இரண்டும் மொக்கைதான்.

விஸ்வரூபம்: எப்படியும் தியேட்டரில் ஒரு முறை, எந்தெந்த காட்சிகள் கத்தரிக்கப்பட்டுள்ளன என்று பார்க்க திருட்டு சிடி, என்று நிறைய முறை பார்க்க வேண்டி இருக்கும். இதுவரை கமல் நடிப்பு(ம்) தவிர மற்ற துறைகளில் பங்கேற்ற படங்களில், கடைசியில் இருப்பது 'மன்மதன் அம்பு'. இது கண்டிப்பாக அதற்குக் கீழ் போகாது.

ஒரு முக்கியமான விஷயம் சொல்ல மறந்து விட்டேன். இந்த நான்கு படங்களும் நான் இன்னும் பார்க்கவில்லை. சும்மா படித்தும், கேட்டும் தெரிந்தும் எழுதிய பதிவு. அம்புட்டுதேன்.  

2 comments:

  1. தமிழர்களே, தமிழர்களே, என்னைக் கடலில் தூக்கிப் போட்டாலும் கட்டு மரமாக மிதப்பேன். கடல் படம் பார்க்க விட்டால், கருங்கல் போல மூழ்குவேன்.

    ReplyDelete
  2. மோசமானதா இருந்தாலும் என்னோடதாக்கும்... நான் பின்னூட்டத்தை சொன்னேன்.

    ReplyDelete

உங்களின் கீழ்/மேலான கருத்துக்கள்..