Tuesday, February 5, 2013

விமர்சனம் 2013!!

இந்த வருடம் இதுவரை வந்த படங்கள், ஒரு பார்வை. ரம் பம் பம் ஆரம்பம். சரி சரி ஓடாதீங்க. 

அலெக்ஸ் பாண்டியன்: இந்தப் படத்தை அனைவரும் கழுவி கழுவி ஊற்றி, நன்கு சுத்தமாக இருப்பதால், நான் எதுவும் சொல்லவில்லை. ஒரு சில கீச்சுக்கள் மட்டும்.

"அலெக்ஸ் பாண்டியனுக்கு நம்ம வடிவேலோட டெலெக்ஸ் பாண்டியன் எவ்வளவோ மேல். 

டிரீம்வொர்க்ஸ் அனிமேஷன்ஸ், ஸ்டுடியோ கிரீன் மீது வழக்கு. அலெக்ஸ் பெயருக்கு களங்கம் உண்டாக்கியதாக."


இந்த படம் வெளிவர, மற்ற படங்களைத் தடுத்ததாக சில செய்திகள். சூர்யா, கார்த்தி மீது ஒரு நல்ல எண்ணம் இருந்து வருகிறது. அந்த எண்ணம் போனால் எனக்கென்ன, இருந்தால் எனக்கென்ன என்கிறீர்களா. சரிதான். ஆனால், என்ன ஆகும் என்றால், தியேட்டர் போய் படம் பார்க்கும் எண்ணம் போய் விடும். சரி போகாதே என்கிறீர்களா.

சமர்: ஒரு வித்தியாசமான திரில்லர். இதையும் 'The Game' படத்தின் தழுவல் என்றெல்லாம் பதிவுகள். நான் என்ன நினைக்கின்றேன் என்றால், அங்கெல்லாம் போக வேண்டாம். "மேனியெல்லாம் சிறகுகள்" என்ற சுபாவின் கதை உள்ளது. அந்த புத்தகம் என்னிடம் இப்போது காணவில்லை. இல்லையெனில் அது எப்போது எழுதப்பட்டது என்பதையும் சொல்லியிருக்கலாம். அதுவும் இதே போல மனித உணர்வுகளுடன் ஆடும் விளையாட்டுதான். அதில் காட்டில் நடக்கும். இதில் வெளிநாட்டில் நடக்கிறது.

கண்ணா லட்டு தின்ன ஆசையா: பாக்கியராஜ் தனது மகனை வைத்து 'ரீமேக்' செய்ய திட்டமிட்டதாக சொன்னவுடன், "சார், உங்க பையன், உங்க கதை, நீங்க எடுக்கலாம், எங்கள பாத்தா உங்களுக்கு பாவமா இல்லையா?" என்றுதான் கேட்க தோன்றியது. நல்லா யோசிச்சுப் பாருங்க சார், நீங்க ஒரு தகப்பன் ஆனா பின்பு, இயக்குனரா உங்களால வெற்றி பெற முடியல. வேணாம் சார். எல்லோரும் நல்லாருப்போம். விட்ருங்க.

எனக்கென்னவோ, சந்தானம் முதலிலேயே பாக்யராஜிடம் போய், "சார் நீங்களே இயக்குங்க" என்று மட்டும் சொல்லியிருந்தால், படம் இன்னும் பயங்கர வெற்றி அடைந்திருக்கும் என்று தோன்றுகிறது. இருந்தாலும், பவரின் பவரால் வெற்றி.

கடல்: 'கடல் உள் வாங்கிருச்சாமே, கடல் - டல், கடல் அல்ல, கலங்கிய குட்டை, அடடே, கடலையே கழுவி கழுவி ஊற்றுகிறார்களே, கடல் பாத்ததுக்கு என்னைத் தூக்கி கடலில் தூக்கிப் போட்டிருக்கலாம், ரஹ்மான் என்ற கட்டு மரம் மட்டும் இல்லாவிட்டால், கடலில் மூழ்கியிருப்பேன்', என்று கடல் படத்தை அனைவரும் சொல்லிவிட்டார்கள்.

இருந்தாலும், எனக்கு பிடித்த ஒரு விமர்சனம், இன்னும் சொல்லப் போனால் ஒரு பன்ச். நம்ம அக்கிலீக்ஸ் அண்ணாச்சியோடதுதான்.

"கடல் பார்க்கணும்னு நினைக்கிறவங்க மெரினாவுகோ இல்லை வேற ஏதோ பீச்சுக்கோ போய் பார்த்துக்கோங்க. எங்க ஊர்ல பீச் இல்லன்னு சொல்றவங்க கடல் போட்டோவ வெறிச்சு வெறிச்சு பாத்துக்கோங்க ஆனா தியேட்டர் பக்கம் மட்டும் போய்டாதீங்க"


கீழே ஒரு கணக்கு உள்ளது. கூட்டிக் கழிச்சி விடை சரியா. சொல்லுங்க.

அர்ஜுன்+மம்முட்டி = வந்தே மாதரம், மொக்கை
மம்முட்டி+அரவிந்த் சாமி = புதையல், மகா மொக்கை.
அரவிந்த் சாமி+அர்ஜுன் = கடல், மரண மொக்கை.

எப்படி பாத்தாலும், நாமதான் பாவம் போலிருக்கே.

டேவிட்: 'ஒரு வீடு இரு வாசல்' படத்திற்கும், இதற்கும் என்ன வித்தியாசம்? அதில் முதல் கதை முழுதும் முடிந்த பின் இரண்டாம் கதை வரும். கடைசிக் காட்சியில் இரண்டு கதைகளும் இணையும். இந்தப் படத்தில் நான் லீனியர், அதாவது மாறி மாறி வருகின்றன. மற்றபடி இரண்டும் மொக்கைதான்.

விஸ்வரூபம்: எப்படியும் தியேட்டரில் ஒரு முறை, எந்தெந்த காட்சிகள் கத்தரிக்கப்பட்டுள்ளன என்று பார்க்க திருட்டு சிடி, என்று நிறைய முறை பார்க்க வேண்டி இருக்கும். இதுவரை கமல் நடிப்பு(ம்) தவிர மற்ற துறைகளில் பங்கேற்ற படங்களில், கடைசியில் இருப்பது 'மன்மதன் அம்பு'. இது கண்டிப்பாக அதற்குக் கீழ் போகாது.

ஒரு முக்கியமான விஷயம் சொல்ல மறந்து விட்டேன். இந்த நான்கு படங்களும் நான் இன்னும் பார்க்கவில்லை. சும்மா படித்தும், கேட்டும் தெரிந்தும் எழுதிய பதிவு. அம்புட்டுதேன்.  

Thursday, January 31, 2013

விஸ்வரூபம் - தவறு கமல் மீதுதான்

முதலில் கமலுக்கு வன்மையாக என்னுடைய கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இத்தனை வருடங்கள் நிறைய அரசியல்வாதிகளுடன் பழகியும்அவர்களைப் பற்றி தெரிந்து கொள்ளவில்லையா அல்லது தன்னைப் பற்றிய தலைக்கனமா என்று தெரியவில்லை. அது மட்டுமின்றி ஒரு பிரபலம் தன்னுடைய கருத்தை பொதுவில் சொல்லும்போது அதை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக எடுத்தோ கொள்வார்கள் என்பதை அவர் உணரவில்லை. என்னுடைய இந்தப் பதிவை யாரும் சீண்டப் போவதில்லை. ஆனால்ரஜினி திடீரென 'கமல் மீது தவறுஎன்று சொன்னால் என்ன ஆகும்எவ்வளவு பெரிய பிரச்சினை ஆகும்.

முதலில் உரிமையை வேறொரு தொலைக்காட்சிக்கு கொடுத்து விட்டுமீண்டும் கை மாற்றியதாக செய்திகள். இதற்காக அந்த தொலைகாட்சி வழக்கு தொடர்ந்திருக்கலாம் ஆனால் ஆட்சி அவர்களிடம் உள்ளது. போதாக்குறைக்கு கமல் வேறு 'இது என்னுடைய பொருள், இதை எப்படி விற்க வேண்டும் என்று எனக்கு தெரியும்" என்று சீன் போட்டார். அது DtH பற்றித்தான் என்று நாம் நினைத்திருந்தோம் ஆனால் உண்மை என்ன என்று தெரியாதல்லவா

கொஞ்ச நாட்களுக்கு முன் "நீங்கள் கடனில் உள்ளீர்களா" என்று பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கு "நீங்கள்தான் அப்படி சொல்லிக்கொள்கிறீர்கள்நான் ஆடி காரில்தான் போய் வருகிறேன்" என்றவர்இன்று வேறு வழியின்றி உண்மையை ஒப்புக்கொண்டு விட்டார். 

இந்த சம்பவத்தை இரண்டு வகையில் எடுத்துக் கொள்ளலாம். 
கமலைப் பிடித்தவர்களுக்கு: தன்னுடைய கஷ்டம் விளம்பரம் ஆகிவிடக் கூடாது என்பதற்காக அவர் முன்பு அப்படி சொல்லியிருக்கலாம். இப்போது தன்னிடம் இழக்க ஒன்றுமில்லை என்பதால் உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார் எனலாம்.
கமலைப் பிடிக்காதவர்களுக்கு: அப்போதும் இப்போதும் மாற்றி மாற்றி பேசுகிறார். தன்னிடம் ஏதுமில்லை என்றெல்லாம் கண் கலங்கினால் மக்கள் ஆதரவு கிடைக்கும் படத்துக்கும் விளம்பரம் ஆகும். அவர் ஒரு நல்ல நடிகர் அல்லவா என்பார்கள்.

கமல் மீதுஅவரது தொழிலில் நிறை பேர் வைத்த குற்றச்சாட்டுபணத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றி விட்டார். சரண்சாய் மீராஎன்று நிறைய பேர். உண்மைபொய் என்பதெல்லாம் அப்புறம். பொதுவாக நாம் ஒருவரிடம் ஒரு வேலை கொடுக்கிறோம். அது பாதியில் உள்ளபோது ஏதேனும் வேறுபாடு வந்துவேலையை நிறுத்தி விட்டால்குறிப்பிட்ட பணத்தை மட்டும் நாம் கொடுப்போம்அல்லது திரும்ப வாங்கிக் கொள்வோம். இது சுமூகமாக நடக்காவிட்டால்வழக்குதான். இதேதான் கமலுக்கும். 

அடுத்த பிரச்சினைக்கு வருவோம். தசாவதாரம்மன்மதன் அம்பு படங்கள் வந்த பொதுஇந்து அமைப்புகள் சொன்னது என்னவென்றால், "இந்து அமைப்புகள் ஒன்றும் செய்ய மாட்டோம் என்று எண்ணி கமல் இந்துக்களை கேவலப்படுத்தி படம் எடுக்கிறார். அவர் ஏன் முஸ்லிம் பற்றி படம் எடுக்கவில்லை?" என்றார்கள். சரி இப்போது எடுத்து பிரச்சினை ஆகி விட்டது. அவர்கள் யாருக்காவது ஒரு பக்கமாக நின்று பேசலாமே? "கமல் எப்போதும் இப்படித்தான்" என்று முஸ்லிம்களுக்கு ஆதரவாக நிற்கலாம். ஏன் நிற்கவில்லை. விளம்பரம் வராது. அவர்களை யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள்.

முஸ்லிம் அமைப்புகள். "நாங்கள் குட்ட குட்ட குனிந்து கொண்டே இருக்க வேண்டுமாரோஜாபம்பாய்உன்னைப் போல் ஒருவன்துப்பாக்கி என்று பல படங்கள். இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது என்று பொங்கி விட்டோம்". நல்லது மிக நல்லது. அந்த படங்கள் வெளியாகி ஓடி விட்டன. ஆனால்இன்றும் ரோஜா படம் சுதந்திர தினம்குடியரசு தினம் என்று பொதிகை தொலைக்காட்சியில் வருகிறதே. அதை ஏன் தடை செய்ய நீங்கள் கோரவில்லைஒரு பத்து வயதுப் பையன் 'ரோஜாபடத்தை தொலைக்காட்சியில் பார்த்து விட்டுஉங்கள் மதத்தின் மேல் துவேஷம் கொள்ளலாம் இல்லையாமற்ற படங்கள் அனைத்தும்தமிழகத்தில் எந்த வகையிலும் திரையிடவோவெளியிடவோதொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படவோ கூடாது என்று ஏன் நீங்கள் தடை கோரவில்லை? (இது அனைத்து விஜயகாந்த் படங்களுக்கும் பொருந்தும்.) ஏனென்றால் விளம்பரம் கிடைக்காது. 

கமல் அந்த திரைப்படத்தை தனியே திரையிட்டுக் காண்பித்ததும்அவரிடம் ஒன்றுமே சொல்லாமல்இரண்டு நாட்கள் கழித்து போர்க்கொடி தூக்கினீர்கள். கேட்டதற்குபடம் பார்த்ததில் அவ்வளவு கோபம்பாடல்கள் இல்லைசண்டை இல்லை. முஸ்லிம்களுக்கு எதிரான ஆவணப் படம் போல உள்ளது என்று. ஏன் அப்போதே நீங்கள் கமலிடம் பேசவில்லை. இரண்டு நாட்கள் எங்கு ரூம் போட்டு யோசித்தீர்கள்?

Oh My God ஹிந்தி படம். அரபு நாடுகளில் தடை செய்யப்பட்டது. அது இந்திய முஸ்லிம்களை நேரடியாக குறிக்கிறது. அதை எதிர்த்து நீங்கள் போராடவில்லை. இந்த படம் அங்கு வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது (என்று நினைக்கிறேன்). நீங்கள் போராட்டம் செய்கிறீர்கள்.

மற்றவர்கள் போல நீங்கள் அதை ஏன் கண்டிக்கவில்லைஇதை ஏன் கண்டிக்கவில்லை என்று நான் கேட்க மாட்டேன்இந்தப் படத்தை மட்டும் ஏன் தடை செய்கிறீர்கள் என்றுதான் கேட்கிறேன்.

நாட்டில் இதுவரை படங்களால் இந்து முஸ்லிம் ஒற்றுமையோ, சாதிப் பிரச்சினையோ ஏற்பட்டதில்லை. குண்டுவெடிப்பு, வேறு பல பிரசினைகளின்போதுதான் கலவரமே ஏற்பட்டது. மக்கள் யாரும் படங்களைப் பார்த்து அப்படியே நம்புவதற்கு கமல் ஒன்றும் எம்.ஜி.ஆர். அல்ல. இப்போது கமல் ரசிகர்கள் அனைவரும் தேவையின்றி பாரம்பரிய முஸ்லிம்களை ஒரு எதிரி போல பாவிப்பர். 

தமிழக அரசுமன்னிக்கவும்ஜெயலலிதாவின் என்னுடைய ஆட்சி: படங்களை தடை செய்வது என்பது தேவையில்லாத ஒன்று. இது டேம் 999 படத்துக்கும் பொருந்தும். அது வழக்கம் போல வெளிவந்திருந்தால் கூட யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். அப்போது கேரளா-தமிழகம் இடையே பிரச்சினை உச்சத்தில் இருந்த காலம். எனவேஅதை தள்ளி மட்டும் வைத்திருக்கலாம். முழுதும் தடை செய்தது தேவையில்லாத ஒன்றுதேவையில்லாத விளம்பரம். இப்போது கூட உச்ச நீதிமன்றம்முல்லைப் பெரியாறு பற்றிய வழக்கு தீர்ப்புக்கு காத்திருப்பதால்இதை வெளியிட வேண்டாம் என்று கூறியுள்ளது.

டேம் 999, இருவர் போன்ற படங்கள் நேரடியாக பெயர் சொல்லி குறிப்பிடப்படவில்லை என்றாலும்சுய அறிவு உள்ள யாராக இருந்தாலும்அது எதைப் பற்றிக் குறிக்கிறது என்று அனைவருக்கும் புரியும் வகையில் இருந்தது. ஆனால் இது அப்படியா என்று பார்க்க வேண்டும். 

ஒருவேளை படம் எப்போதும் போல வந்திருந்தால் கூட ஒன்றும் நடந்திருக்காது. ஆனால் இப்போது வெளியிட்டால், மத இயக்கத்தினர் உடனே படத்தை தடை செய்ய வேண்டும் என்று பேரணி, ஊர்வலங்கள் நடத்துவர். சட்டம் ஒழுங்கு கண்டிப்பாக சீர்குலையும். படம் நிரந்தரமாக தடை செய்யப்படும். 

"நிறுத்து. இது என்னுடைய ஆட்சிக்கு தேவையில்லாத விளக்கம். நான்என்னுடைய ஆட்சியிலே என்ன செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரியும்." என்கிறீர்களாசரிதான்.

கமல் அவர்களே,

டெல்லி கற்பழிப்பு பழைய சோறு. நீங்கள் இப்போதைக்கு சுடு சோறு. இன்னும் ஓரிரு நாட்கள்தான். அதன் பின் நீங்களும் அனைத்து செய்திகளில்பதிவுகளில்எண்ணங்களில் இருந்து பின்னால் சென்று பின்னர் மறக்கப் படுவீர்கள். நீங்கள் சொன்னது போலஇது உங்களுடைய பிரச்சினை. நீங்கள்தான் பார்த்துக் கொள்ள வேண்டும். தங்களின் திரையுலக நண்பர்கள்ரசிகர்கள் யாரும் இருக்க முடியாது. அவரவர்களுக்கு வேலை உள்ளது.

தயவு செய்துமற்றவர்களின் படங்களில் மட்டும் நடியுங்கள். தங்களின் கதைஇயக்கம் தயாரிப்பு எதுவும் வேண்டாம். ஒரு  நகைச்சுவைப் படம்ஒரு மசாலா படம். அது போதும் எங்களுக்கு. உங்களுடை தொழில்நுட்பங்கள்புது முயற்சிகளால்உங்களுக்கும் லாபம் இல்லைஎங்களுக்கும் ஒன்றுமில்லை. எல்லோரும் அம்மணமாக உள்ள ஊரில்நீங்கள் மட்டும் அந்த பதினாறு வயதில் இருந்து இன்னும் கோமணத்துடன் உள்ளீர்கள்.

கடந்த தேர்தலின்போது உங்களுக்கு 200 கோடியும்மருதநாயகம் படத்தை முடிக்க பணமும் தருவதாக ஒரு அரசியல் கட்சி சொன்னதாக ஒரு வதந்தி வந்தது. இப்போது அதை ஒருவேளை ஓசியிலேயேஇல்லை இல்லை உங்களது பணம் 100 கோடியில் நடத்தி விடுவார்களோ என்று சந்தேகமாக உள்ளது. ஆனால்நீங்கள் அப்படி போக மாட்டீர்கள் என்று தெரியும்.

இப்படிக்கு,

தங்களிடம் இருந்து மீண்டும் ஒரு சகலகலா வல்லவனையும்வேட்டையாடு விளையாடுவையும்சிங்கார வேலனையும் மட்டும் எதிர் பார்க்கும் ஒரு தமிழன்.





Sunday, January 20, 2013

மிச்ச சொச்ச விமர்சனங்கள் 2012


ஏற்கனவே பழைய சில பல பிட்டுகளில் போன வருடம் வந்த படங்களில் என்னைக் கவர்ந்தவற்றைப் பற்றி சொல்லி விட்டேன். இவை மிச்ச சொச்சங்கள்.

தடையறத் தாக்க: மௌன குரு படத்திற்கு பின் வந்த இன்னொரு நல்ல படம். வெளிநாட்டில் இருந்ததால் திருட்டுத்தனமாக பார்க்கிறோமே என்று நினைக்க வைத்த படம். குறைகள் இருந்தாலும் அருமையான படம்.

சகுனி: எனக்கென்னவோ இயக்குனருக்கு இந்த பெயர் நன்றாகப் பொருந்தும் என்று தோன்றுகிறது.

நான் ஈ: இப்படியும் கூட படம் எடுக்க முடியுமா என்று யோசிக்க வைத்த படம். எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம்.

பில்லா 2, தாண்டவம், முகமூடி: வேணாம். அழுதுடுவேன்.

அட்டகத்தி: அப்படி ஒன்றும் ஆஹா ஓஹோ என்று இல்லை. ஆனாலும், நல்ல படம். ஒரு முறை ரசிக்கலாம். எனக்கு மிகவும் பிடித்தது முடி வெட்டும் காட்சிதான்.

நான்: இந்த வருடம் மிக நல்ல திரில்லர் படங்கள் வந்த வருடமாக இருக்கும் என்று நினைக்கிறேன். இதிலும் குறைகள் உண்டு. ஆனாலும், விஜய் ஆண்டனி தனக்கு என்ன வருமோ அதை மட்டும் செய்ததால் தப்பித்தார், நாமும் தப்பித்தோம்.

சாட்டை: அடுத்து என்ன நடக்கும் என்று சுலபமாக கணிக்கக் கூடிய ஒரு திரைக்கதை. ஆனாலும், எடுத்த களத்தினால் இந்த படம் எனக்குப் பிடித்தது. இறுதியில், அவர் ஒரு அரசுப் பணியாளரே இல்லை, சும்மா திருத்துவதற்காக வந்தார் என்று சொவார்களோ என்று நினைத்தேன். நல்ல வேலை, இல்லை.

ஆங்கிலம் வாங்கிலம்: இப்படி ஒரு தலைப்பை யார் வைத்தார்கள் என்று தெரியவில்லை. இந்தப் படத்தை, மெத்தப் படித்த அல்லது அப்படி நினைக்கின்ற யாருமே, "பரவால்ல, பாக்கலாம்" என்பார்கள் என் அம்மா, சும்மா பொழுது போக்கிற்காக டிவி பார்ப்பவர், ரசித்துப் பார்த்த திரைப்படம். அவர் இரு முறை, சிங்கப்பூருக்கு தனியாக விமானத்தில் சென்று வந்த அனுபவம் கூட காரணமாக இருக்கலாம்.

மாற்றான்: ஏன் தோற்றான் என்று ஊருக்கே தெரியும்.

துப்பாக்கி: கொஞ்சம் காமெடியாக இருந்தாலும், மற்ற மொக்கைகளுக்கு எவ்வளவோ பரவாயில்லை. பல காட்சிகள் கேனத்தனமாக (உண்மைதான்) இருந்தாலும், மன்னிக்கலாம்.

நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்: அடடா, பசங்க கூட போய் பாத்திருந்தா எவ்வளவு ஜாலியா இருந்திருக்கும் என்று எண்ணி எண்ணி சிரிக்க வாய்த்த படம். படத்தின் பலமே பாத்திரத் தேர்வுகள். அனைவருமே நாம் தினந்தோறும் பார்க்கும் முகங்களாக இருந்ததுதான்.

பீட்சா: என்னைப் பொறுத்தவரை கடந்த வருடத்தின் மிகச் சிறந்த திரைப்படம். பொதுவாகவே, பேய்ப் படங்களில் தேவையின்றி பயமுறுத்தும் காட்சிகள் வந்தால் எரிச்சலாக இருக்கும். ஆனால், இந்தப் படம்தான் ஏன் அப்படி காட்சிகள் தேவை என்று உணர வைத்த படம். 'என்ன படம்டா இது' என்று இடைவேளை வரை குழப்பி விட்டு, 'என்ன படம்டா இது' என்று இறுதியில் பெருமைப்பட வைத்தது.


Sunday, December 23, 2012

பதிவு எண் : 50/5

பதிவு எண் : 50

வருடங்கள் : 5


சராசரி பதிவுகள்/வருடம் : 10


மொத்த பின்னூட்டங்கள் : 154


சராசரி பின்னூட்டங்கள்/பதிவு : 3


சராசரி வருகையாளர்கள்/பதிவு : 88

அதிகம் படிக்கப்பட்ட பதிவு : க்ரைம் நாவல். ஆசிரியர் - ராஜேஷ் குமார்(498)

அதிக பின்னூட்டமிடப்பட்ட பதிவு : ராஜா ரசிகனும், ரஹ்மானும்!!!(18)


டிஸ்கி 1 :
எழுத விஷயம் ஒன்றுமில்லை. அதனால, ஒரு விளம்பரம்!!

டிஸ்கி 2 : பதிவைத்தான் பெருசா போடா முடியல.. Fotoஆவது பெருசா போடலாம்னு.. ஏய், நோ கெட்ட வார்த்தை!

டிஸ்கி 3 : 50 பதிவு போடவே 5 வருடம் ஆயிருச்சே.. நானெல்லாம் 500 பதிவு போடணும்னா, கடவுளே.. இன்னும் எத்தனை பிறப்பு எடுத்தாலும் எனக்கு இந்த sivigai.blogspot முகவரியையும், அதே பழைய பதிவுகளும், பின்னூட்டங்களும் வர மாதிரியே இருக்க வரம் கொடு சாமி...


Monday, December 10, 2012

இசை எங்கிருந்து வருகிறது?

பயப்பட வேண்டாம். நீங்களும் வடிவேல் அல்ல. நானும் அவர் இல்லை (ஹி ஹி, அவர் பெயர் தெரியவில்லை). இந்த பதிவிற்கு ஏன் இந்த பெயர்க் காரணம் என்று பின்னர் தெரிந்து கொள்வீர்கள். இனி வழக்கம் போல எனது மொக்கைப் பதிவைத் தொடர்ந்து படியுங்கள்.

ரஹ்மானின் ஆஸ்கார் பற்றிய எனது பதிவு. இதைக் கொஞ்சம் படித்து விட்டு வாருங்கள்.

சும்மா, வலையுலாவிக் கொண்டிருந்த பொது, ஆஸ்கார் வாங்கி வந்த பின் நடந்த விழாவில் இளையராஜா பேசியதையைக் கேட்க நேர்ந்தது.அது பற்றி மற்ற மக்கள் இட்டிருந்த கருத்துக்களையும் படித்துக் கொண்டிருந்தேன். (அதை இங்கே பகிரவில்லை). உண்மையில் ராஜா மிக கஷ்டப்பட்டு சுற்றி, வளைத்து, எப்படியோ சமாளித்து பாராட்டியிருந்தார். 'குருவை மிஞ்சிய சிஷ்யன்' என்று சில பேர் சொல்லியிருந்தனர். உண்மையில் ராஜா ஒன்றும் குரு கிடையாது. ரஹ்மானும் சிஷ்யன் கிடையாது. ரஹ்மான் ராஜாவிடம் வேலை செய்தவர். அவ்வளவுதான். எந்தவொரு மனிதனாய் இருப்பினும், தனக்குக் கீழ் இருந்த ஒருவன்,தனக்கு மேலே, உயரே, உச்சிக்கு போன பின். தான் போய் வாழ்த்த வேண்டும் என்றால் கொஞ்சம் கஷ்டம்தாம். அதுவும் ராஜாவை, ஒரு மனிதனாகப் பார்க்கும்போது அந்த கஷ்டம் புரியும்.

ஒரே அலுவலகத்தில், உங்களுக்குக் கீழ் வேலை பார்க்கும் ஒரு சின்னப் பையன், தன்னுடைய திறமையால் முன்னேறி, (உங்களுக்கும் திறமை உண்டு, ஆனால் என்ன, கொஞ்சம் வாய் அதிகம். தன்னால் மட்டுமே முடியும் என்ற தலைக்கனமும் உண்டு) உங்களுக்கு மேல் போய் நிற்கும்போது உங்களுடைய மனநிலை எப்படியோ அதே போலத்தான் அவருக்கும். அவர் என்னதான் தன்னை ஞானி என்று சொல்லிக் கொண்டாலும், அவர் அப்படியில்லை. இருந்திருந்தால், வைரமுத்துவுடன் எப்போதோ சேர்ந்திருப்பார்.

எனக்கு புரியாத இன்னொரு விஷயம். பாரதி ராஜா - இளையராஜா - வைரமுத்து கூட்டணி எப்போது எப்போது அமையும் என்று எல்லோரும் கேட்பதுதான். ஒருவேளை அமைந்தாலும், அது ஒரு வியாபாரமாக மாற்றப்படும். அவ்வளவே. ஒருவேளை ராஜாவும், வைரமுத்துவும் நாங்கள் குடும்ப நண்பர்காலக் இணைகிறோம், தொழில் முறையில் அல்ல, என்றால் நாம் எல்லோரும் மகிழ்ந்து விடப் போகிறோமா? இல்லை. நமக்குத் தேவை, நல்ல இசையும் அழகான பாடல் வரிகளும். அப்போது அவர்களுக்குள் அந்த Chemistry நன்றாக இருந்தது. முப்பது வருடங்களுக்குப் பின்னும், அது அப்படியே இருக்கும் என்று சொல்ல முடியாது.

இப்போது அதையே வேறு கண்ணோட்டத்தில் பார்ப்போம். எப்படிப் பார்த்தாலும், வியாபாரம்தான் முக்கியம். ஒருவேளை அவர்கள் இணைந்தாலும், இருவரும் இலவசமாக செய்யப் போவதில்லை. பணம்தான். எனவே, ராஜா எங்கிருந்தோ இசையைக் கொடுக்கலாம். அதற்கு வைரமுத்து தன்னுடைய வரிகளைக் கொடுக்கலாம். இருவரும் ஒன்றாக இருக்க வேண்டிய அவசியமே இல்லை இந்தக் காலத்தில். ஆனால், இருவருமே ஒப்புக் கொள்ள மாட்டார்கள். காரணம் தன்மானம் அல்லது முரட்டுப் பிடிவாதம்.

இங்கும் அதே அலுவலக உதாரணத்தை எடுத்துக் கொள்ளலாம். உங்களுக்கு உங்கள் மேலதிகாரியுடன் பிரச்சினை என்று என்று வேறு துறைக்கு சென்று விட்டீர்கள். பயங்கர மனக்கசப்பு. ஒரு மிக மிக உயர்ந்த அதிகாரி வந்து "நீங்க ரெண்டு பெரும் மறுபடி ஒண்ணா ஒரே டீம்ல இருந்தா நல்லாருக்கும், சம்பளம் கூட ஏத்திக்கலாம்" என்றால், நீங்கள் என்ன சொல்லுவீர்கள்? "எனக்கு என் மரியாதைதான் முக்கியம்" என்பீர்கள் அல்லவா? இது உங்களது தன்மானம் என்று நீங்கள் சொல்வீர்கள். மற்றவர்கள் முரட்டுப் பிடிவாதம் என்பார்கள். எனவே இதை விட்டு விடலாம். இருவரும் என்கிருதாலும், தங்களது பணிகளை, தனியே, செவ்வனே செய்கின்றனர்.

தாமிரா இது பற்றி ஆனந்த விகடனில் எழுதிய சிறுகதையில், கடைசியாக வரும் வசனம். "அவங்க ரெண்டு பெரும் சேந்து பண்ணின அந்த பழைய பாட்டெல்லாம், அவங்க கேக்கும்போது, கண்டிப்பா அவங்களுக்கு பழைய நெனப்பு வராம இருக்காது. ஆனா, என்ன அவங்கள தடுக்குது" (இதே வரிகள் இல்லை. என் நினைவுகளில் இருந்து எழுதியுள்ளேன்).

இந்த 'பழைய நினைப்பு' பார்த்தவுடன், எனக்கு ஒரு 'பழைய நினைப்பு'. ஹாரீஸ் ஜெயராஜ், ஒரு மேடையில் சொன்னார். பத்து வயதில், இசைக் குழுவில வேலை செய்யும் தன தந்தைக்காக சாப்பாடு கொண்டு போகும்போது, அங்கு ரஹ்மான் மட்டும் தனியே அமர்ந்து சாப்பிடக் கூட போகாமல் எதையாவது இசைத்துக் கொண்டே இருப்பாராம். அவர்தான் தன்னை முதன் முதலில் 'வாசிக்கிரியா?' என்று கேட்டதாகவும் சொன்னார். இன்னொரு விழாவில், ரஹ்மான் கூறியது. "அப்பா நான் ராஜா சார்கிட்ட வேலை பாத்திகிட்டிருந்தேன். ஒரு சின்னப் பையன் வந்து அங்கிள் அங்கிள்னு என்கிட்டே பஐவான். அதுதான் யுவன்". இதே போல ராஜாவுக்கும், ரஹ்மான் சிறு வயதில் எப்படி தன்னிடம் வேலைக்கு வந்தார் என்றும் சொல்லியிருக்கிறார். இன்னும் யாரும் எதையும் மறக்கவில்லை. இங்கே நல்ல விஷயமாக இருக்கிறது. வைரமுத்து விஷயத்தில், கெட்டதாக உள்ளது. என்ன கொடுமை.

"அடக் கொடுமையே. நான் சொல்ல வந்த விஷயத்தைத் தவிர மத்த எல்லாத்தையும் சொல்லிக்கிட்டிருக்கேன் பாருங்க."

ரஹ்மான் காப்பி என்றெல்லாம் தேடுவேன் என்று சொன்னேன் அல்லவா. அதே போல ஒவ்வொரு இசையமைப்பாளரும் காப்பி அடித்தை எல்லாம், வலையுலாவினால் கிடைக்கும். ராஜாவும் கூட அதில் உள்ளார். அங்கே இரண்டு பாடல்களும் இருக்கும். ஒரிஜினல், காப்பி என்று. சில பாடல்களில் இதில் என்ன காப்பி அடித்தனர் என்று கூட தெரியாது.

இதை எதற்கு கூற வந்தேன் என்றால், நாம் கேட்காத பாடல் ஒன்றைத் தட்டி, போட்டு அது நமக்கும் பிடித்து, ரொம்ப நாள் கழித்து இது 'காப்பி' என்று நமக்குத் தெரிந்தால், "பரவாயில்லை" என்று பொறுத்துக் கொள்வோம். என் விஷயத்தில், இது ராஜாவுக்கும், ரஹ்மானுக்கும் மட்டும்தான் பொருந்தும். மற்றபடி, தேவா பாடல்கள் என்றால், எங்கேயிருந்து அடித்திருப்பார் என்று தேடுவோம். ஆனால், எந்தப் பாடலையும் கேட்டவுடனே காப்பி என்று தெரிந்ததில்லை. எப்போதாவது ஒரிஜினல் பாடலைக் கேட்கும்போது, "இது, அதுல்ல?" என்று தோணும்.

ஆனால், இந்த ஹாரீஸ் ஜெயராஜ் இருக்கிறாரே, அவர் ஏன் என்னிடம் நேரடியாக அடிக்கடி மாட்டுகிறார் என்று தெரியவில்லை. முதலில், 'கோவில்' படத்தி வரும் 'காலேஜுக்குப் போவோம்' பாடல். 'ஜாதி மல்லி' படத்தில் வரும் 'கம்பன் எங்கு போனான்' பாடலை நினைவூட்டியது. ஏழாம் அறிவு படத்தில் வரும் சைனீஷ் பாடல், வெட்கக் கேடு. என் நான்கு வயது அக்கா மகள், கேட்டவுடனே, "ஹை, twinkle twinkle little star" என்று கத்தினாள். "நங்கை, நிலாவின் தங்கை" பாடல், நல்ல வேளை, மைக்கேல் ஜாக்ஸன் இறந்து விட்டார்.

இதியெல்லாம் விட இறுதியாக ஒன்று. மாற்றான் படம் ரொம்ப நாளாக பார்க்க முடியவில்லையே என்று, சற்றே கஷ்டத்துடன் (?) தரவிறக்கம் செய்து பார்த்தேன். ஆனால், பார்த்த பின், நல்ல வேலை என்று நினைத்துக் கொண்டேன். அந்தப் படத்தில், சூர்யாவின் Factoryல் அரசு ஆய்வுக்கு வரும் காட்சியில் பின்னணி இசை, 'The Italian Job' படத்தில் தொடக்கத்தில் வரும் இசை. அப்படியே சுட்டிருந்தார். அந்தப் படம் பார்த்து கிட்டத்தட்ட ஏழெட்டு வருடங்களுக்கு முன் பார்த்தது. இசை அப்படியே மனதில் நின்று விட்டது. இதில் இன்னும் கொடுமை அவர் ஒரு நேரத்தில் ஒரு படத்திற்கு இசையமைத்தால்தான், கவனமுடன் பணியாற்றமுடியும் என்று கூறியதாகவும், அதனால் மாற்றான், துப்பாக்கி முன் பின்னே வெளி வந்ததாகவும் தகவல். ஏன் இப்படி? இந்தப் பொழப்புக்கு..

இந்தி காணொளியில் 1:19ல் இருந்து வரும் இசை, அப்படியே அந்த ரைடு நடக்கும் காட்சியில் வரும். அதாவது சூர்யாவின் தந்தையே அழைக்கும் காட்சிக்குப் பின் வரும் காட்சிகள். ஹாரீஸ் செய்த ஒரே மாற்றம், நடுவே, ஒரு சின்னப் பெண் பாரத நாட்டியம் ஆடும்போது சலங்கை சத்தம் வரும். அவ்வளவே. எனக்கு அந்தக் காணொளி கிடைக்க வில்லை.


இப்ப சொல்லுங்க, இசை எங்கிருந்து வருகிறது?

ஹாரீஸ் ஜெயராஜ்: அமெரிக்காவிலே, இங்கிலாந்திலே, ஜெர்மனியிலே (அன்பே சிவம் பாடல் ஸ்டைலில் படிக்கவும்).

Monday, November 26, 2012

நாட்டு நடப்பு


"நம்ம நாடு எப்பங்க முன்னேறப் போவுது.. பாருங்க சிங்கப்பூர், ஜப்பான் எல்லாம் எப்படி முன்னேறியிருக்காங்க."

"என்னங்க பேசறீங்க, அதெல்லாம் சின்ன நாடுங்க.. ரொம்ப ஈஸியா முன்னேறலாம்.. நாம அப்படியா?" ."

"அப்படியெல்லாம் ஒன்னுமில்லீங்க, சைனா, அமெரிக்கா எல்லாம் பெரிய நாடுதான்.. அவங்க எல்லாம் முன்னேறாமலா இருக்காங்க?" ."

"அட என்னாங்க மறுபடியும் மறுபடியும் புரியாம பேசறீங்க, அங்க எல்லாம் ஒரே மொழி.. அதனால எந்த பிரச்சினையும் இல்ல.. இங்க அப்படியா?" ."

"என்னதான் சொல்லுங்க.. எல்லாம் இந்த அரசியல்வாதிங்க ஒழுங்கா இருந்தா எல்லாம் முன்னேறிடும்"."

"அவங்கள மட்டும் சொல்லி குத்தமில்லீங்க, இந்த அரசு வேலை செய்யறவங்க ஒழுங்கா இருந்தாலே போதுங்க.. எல்லாம் தானா முன்னேறும்"."

இவை அனைத்தும் பல படங்களில் வந்திருக்கும், தினமும் பொது மக்கள் பேசிக்கொண்டிருப்பதுதான்.. ."

உண்மையில் யார்தான் பொது மக்கள்.. நாம் பத்து பேருக்கு பொது மக்கள் என்றால், நமக்கு பத்து பேர் பொது மக்களாக இருப்பார்கள்.. 'அரசியல்வாதியும் பொதுமக்களும், மருத்துவரும் பொதுமக்களும், அரசுப் பணியாளரும் பொதுமக்களும், கணினிப் பொறியாளரும் பொதுமக்களும், துப்புரவுத் தொழிலாளியும் பொதுமக்களும்' என்று ஒவ்வொருவரும் மற்றொருவருக்கு பொது மக்களாகவே இருக்கிறோம். உண்மையில் நாம் ஒவ்வொருவருமே நம் நாடு முன்னேறாமல் இருப்பதற்கு காரணம்தான். ."

ஏன் இந்தியாவில் மட்டும் யாரும் சட்டங்களை மதிக்காமல் நடக்கிறோம்? ஏன் நம் நாடு முன்னேற வேண்டும் என்று எண்ணாமல், தான் மட்டும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம்? ஏன் மற்ற நாடுகளில் அப்படி இல்லை? என்னுடைய எண்ணங்கள் பின் வருபவை.. ."

பெரும்பான்மையான வளர்ந்த நாடுகள் (எனக்குத் தெரிந்த வரை இங்கிலாந்து தவிர) மற்ற அனைத்து நாடுகளும் மிக மோசமான நிலையில் இருந்தவை. மக்கள் அனைவரும் கஷ்டப்பட்டால் ஒழிய நாடு முன்னேறாது என்ற நிலைமை. நம் நாடு முன்னேற வேண்டும் நாமும் முன்னேற வேண்டும் என்ற வேகம், வெறி. இன்னொரு மிக முக்கியமான ஒன்று "நம் நாடு, நாட்டின் சட்டங்களை நாமே மதிக்கா விட்டால் வேறு யார் மதிப்பார்கள்" என்ற எண்ணம், அதுவே தலைமுறை தலைமுறையாக தொடர்கிறது. ."

நம் நாடோ, என்றும் வளமான நாடு. வரலாற்றில் எந்தப் பக்கத்தைப் புரட்டினாலும் இந்தியா வளமாகத்தான் இருந்தது, இருக்கிறது, இருக்கும். என்னதான் அரசியல்வாதிகள், பன்னாட்டு நிறுவனங்கள் வளங்களைச் சுரண்டினாலும் இந்தியா அழியாது. பிரச்சினை என்னவென்றால் வளங்கள் குறையக் குறைய மக்கள் தொகை அதிகரிக்கிறது. ."

நம் மக்கள் அனைவருக்கும் உள்ள மிகப் பெரிய பிரச்சினை, "நான் மட்டும் செஞ்சா என்ன ஆயிடப் போகுது" என்ற எண்ணம். இருபது வருடங்கள் கழித்து நடக்கப் போகும் பெண்ணின் திருமணத்திற்கு நகை சேர்க்கும்போது இருக்கும் தொலை நோக்குப் பார்வை, நம் நாட்டைப் பற்றி இல்லை. "என்ன பெருசா நடந்திடப் போகுது, இன்னைக்கு செத்தா நாளைக்குப் பால்" என்பார்கள். தானும், தனது குடும்பம், குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டும். அதற்கு வீட்டில் மட்டும் ஒழுங்காக இருந்தால் போதாது என்பது இன்னும் யாருக்கும் புரியவில்லை. ."

என்னுடைய கருத்து என்னவென்றால், நமக்கு தேவை ஒரு சர்வாதிகார ஆட்சிதான். அப்போதுதான் நாம் முன்னேறுவோம். இந்திரா காந்தியின் 'எமெர்ஜென்சி' காலம் போல. மேலை நாட்டு மக்களுக்கு தங்களது நாட்டின் மேலும், சட்டங்கள் மேலும் மரியாதை உள்ளது. நமக்கு அது சுட்டுப் போட்டாலும் வராது. பயம் வர வேண்டும். பயம் வந்தால், கொஞ்ச நாட்களில் அது பழகி விடும். அனைத்து சர்வாதிகாரிகளும் மோசமானவர்களாக இருந்தாலும், தன நாடு முன்னேற வேண்டும் என்ற எண்ணமே பெரும்பான்மையோருக்கு இருந்தது. அப்படிப்பட்ட ஒருவர் வர வேண்டும். ."

ஆம். நாம் கஷ்டப்படுவோம். நினைத்தபடி எதுவும் செய்ய முடியாது. கருத்து கூற முடியாது. இப்போது மட்டும் என்ன வாழ்கிறதாம். உண்மையில் நம் மூத்த சந்ததியிடம் இருந்த ஒரு நல்ல கெட்ட குணம் என்னவென்றால், "நாமத்தான் ரொம்ப கஷ்டப்பட்டுட்டோம், நம்ம புள்ளங்கலாவது நல்லா இருக்கட்டும்" என்ற எண்ணம்தான். ."

ஏதேதோ கூற வேண்டும் என்று நினைத்தேன். மறந்து விட்டது (சும்மா, தூக்கி உள்ள வச்சிருவாங்கன்னு ஒரு பயந்தான்). எனவே, மக்கள் பயமின்றி தங்கள் கருத்துக்களைக் கூற வேண்டும். ."

உறுதிமொழி: ஒருவேளை நான் கைதி செய்யப்பட்டால், என்னுடன் பள்ளியில் படித்த பூபதி என்ற நண்பன் வக்கீலாக உள்ளான்.அவனே எனது வழக்கை எடுத்து நடத்த வேண்டும் என்று உளமார உறுதி அளிக்கிறேன். சந்தோசமா பூபதி! ."

சந்தேகம்: ஒருவேளை நான் வெளிநாட்டில் இருந்து பதிவிட்டால், 'ராகவன்' வந்து என்னைக் கைது செய்வாரோ?