Tuesday, June 5, 2012

(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்

அனைவருக்கும் வணக்கம். இந்த நான்கு மாத கால இடைவெளியை பூர்த்தி செய்ய, அடிக்கடி பதிவு போட வேண்டும் என்று எண்ணியுள்ளேன். பார்ப்போம். நினைத்ததெல்லாம் நடந்து விட்டால்..

கஹாணி. சமீபத்தில் மிகவும் ரசித்த திரைப்படம். பாகிஸ்தானில் இருந்தும், சீனாவில் இருந்தும் வரும் தீவிரவாதிகள், சண்டை, பாடல்கள் எதுவும் இல்லாத, ஆனாலும் ஒரு அருமையான ரசிக்கும் வகையில் இருந்த திரைப்படம். மௌன குருவை விட அட்டகாசமான திரைப்படம். உண்மையிலே இது போன்ற திரைப்படங்களை அப்படியே ரீமேக்கினால், உண்மையிலேயே 'ஒஸ்தியாக' இருக்கும். கொல்கத்தாவில், மெட்ரோ ரயிலில் நடக்கும் விபத்து. காணாமல் போன கணவனைத் தேடி வரும் இளம்பெண், சாதாரண அரசாங்க ஊழியர்கள் போர்வையில் நாட்டுக்கு நல்லதும் கெட்டதும் செய்யும் ஆட்கள் என்று பல முடிச்சுகள் போட்டு, இறுதியில் அட்டகாசமான முடிவு உள்ள படம்.

டெல்லி பெல்லி. என்ன தைரியத்தில் இந்த படத்தை தமிழில் எடுக்கிறார்கள் என்றே தெரியவில்லை. கருவை மட்டும் வைத்துக் கொண்டு, தமிழுக்கேற்றவாறு கலாசாரம் கெடாமல் எடுக்கிறோம் என்றால் சாதாரண மசாலா படத்தை விட கேவலமாக இருக்கும். பார்க்கலாம். ரசிக்கும் படி இருந்தால், உண்மையிலேயே மிகவும் சந்தோஷம்.

மற்றபடி, ஒரு கல் ஒரு கண்ணாடி, வழக்கு எண் என பல படங்கள். வழக்கு எண், வழக்கத்திலிருந்து சற்றே மாறுபட்டிருந்த படம். ஆனாலும், காட்சிகள் அந்தந்த பாத்திரங்களின் பார்வையில் வந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். OK OK ஓகே. கலகலப்பு கல கல. மற்றபடி எதுவுமில்லை.

ரொம்ப நாள் முன், சன் டிவியில் ரமணி vs ரமணி என்ற தொடர் வந்தது. யாருக்காவது நினைவில் உள்ளதா என்று தெரியவில்லை. அப்போது அவ்வளவாக புரியவில்லை என்றாலும் எனக்கு பார்க்க மிகவும் பிடிக்கும். அது ஹிட் என்பதால் இரண்டாம் பாகம் கூட வந்தது. ஆனால், அது அவ்வளவாக எனக்குப் பிடிக்கவில்லை. இப்போது முதல் பாகம் பார்க்கும்போதுதான் புரிகிறது. கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு முன்பே, இப்போதுள்ள தம்பதியர் எப்படி இருப்பார்கள் என்பதை தெளிவாக காட்டியிருப்பார்கள். நாகா இப்படியெல்லாம் எடுத்து விட்டு பின் ஏன் 'ஆனந்தபுரத்து வீடு' என்ற மொக்கை படத்தை எடுத்தாரோ தெரியவில்லை.

கணவனை வாடா போடா என அழைப்பது, சமையல் தெரியாமல் தினமும் வெளியில் சாப்பிடுவது, பள்ளியறைக்கு செல்லப் பெயர், விளம்பர நிறுவன வேலை, ICICI வங்கி வேலை, கிரெடிட் கார்டு, கைப்பேசி, 'க்ளப்டோமேனியா' போன்ற சொற்கள் (இது பற்றி தெரியவில்லையெனில், கண்களால் கைது செய் படம் பார்க்கவும்). தாலியை கழற்றி வைப்பது என பல அட்டகாசங்கள். அதிலும் குறிப்பாக, கீழே வரும் பகுதி எனக்கு மிகவும் பிடித்தது.


கற்பனை கையாடல். இதைப் பார்த்தவுடன் உங்களுக்கு ஏதாவது திரைப்படம் நினைவுக்கு வரலாம். எனக்கு அலை பாயுதே நினைவுக்கு வந்தது. அதே போல சுஜாதாவின் 'நிர்வாண நகரம்' படித்தவர்களுக்கு 'மௌன குரு' படம் பார்க்கும்போது நினைவுக்கு வந்திருக்கலாம். (பொது தொலைப்பேசியை உடைக்கும் காட்சி). இதே போல, ரமணா படத்தில் வரும் மருத்துவமனை காட்சி, ஒரு ராஜேஷ் குமார் நாவலில் வரும். இதைப் பற்றி முன்பே எழுதி உள்ளேன். இவை அனைத்துமே படத்தின் கதைக்கு அவ்வளவாக சம்பந்தமில்லாத காட்சிகள்தான். ஆனாலும், அவற்றின் உண்மையான உரிமையாளர்கள் சரியான முறையில் அங்கீகரிக்கப்படவில்லை என்பது என் எண்ணம். இதனால் அந்த இயக்குனர்களின் மேல் சிறிய வருத்தமும், சற்றே சந்தேகமும் கூட வருகிறது. ஏதேனும் நல்ல காட்சிகள் பார்க்கும் போது 'எங்கிருந்து சுட்டிருப்பார்களோ' என்று. கலப்பு படத்தில் கூட சந்தானம் வரும் காட்சிகள் எனக்கு 'கண்டேன் காதலை' படத்தை நினைவூட்டியது. முறைப்பெண், தாத்தா. என்னவோ போங்க.

இன்னொரு வருத்தமான நிகழ்வு. ஆனந்த விகடன் - மதன் பிரிவு. இதில் உள்குத்தாக நிறைய விஷயங்கள் நடந்திருக்கும். நஷ்டம் என்னவோ நமக்குத்தான் என்று சொல்ல முடியாது. கூடிய விரைவில் 'ஓ பக்கங்கள்' போல குமுதத்திலோ, கல்கியிலோ அல்லது 'அம்மா' சார்பில் ஆரம்பிக்கும் வார இதழிலோ 'மதன் பதில்கள்' வரலாம். காத்திருப்போம்.

4 comments:

  1. மதன் விரைவில் இதழில் தோன்ற வேண்டும்....

    ReplyDelete
  2. Madhan also has to clear his stand. Lest hope for the best. Kahaani is a good movie. Heard gonna remake in Tamil & Telugu. Best of luck to that team.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. அடிக்கடி இந்த மாதிரி பிட்டு போடுங்க சாரே..

    ReplyDelete

உங்களின் கீழ்/மேலான கருத்துக்கள்..