Saturday, March 16, 2013

(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்

பதிவு போட ஒன்னும் இல்லேல்ல.. அதான் பிட்டு.. 

சமீபத்தில் பார்த்த பிற மொழி திரைப்படங்கள் பற்றிய கருத்துக்கள். 

தலாஷ் (Talaash): உண்மையை சொல்ல வேண்டுமென்றால் சத்தியமாக இந்தப் படம் எனக்குப் புரியவேயில்லை. இது நிஜமாகவே பேய்ப் படமா, இல்லை எனக்கு புரியவில்லையா? ஆனாலும் படத்தில் எனக்கு சில காட்சிகள் மிகவும் பிடித்தன. குறிப்பாக, தன மகனின் இறப்பை நினைத்து கலங்கும் அமீர், ஒரு வேளை தன்னுடனே விளையாட வைத்திருக்கலாமோ, தானும் கூட போயிருக்கலாமோ என்று நினைக்கும் காட்சிகள். நாம் அனைவருமே ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அதே போல இறந்தவர்களைப் பற்றி எண்ணியிருப்போம். மற்றபடி நல்ல சப் டைடிலுடன் பார்த்தால் ஒரு வேளை புரியுமோ என்னவோ?


Special 26: படத்தில் சண்டை இல்லை. பறக்கும் டாட்டா சுமோக்கள் இல்லை. ஆனாலும் படம் பரபரவென்று பறக்கிறது. நடுநடுவே காதல் காட்சிகளும், பாடல்கள் மட்டும் வேகத்தடை. A Wednesday படத்தில் பாடல்களோ, காதலோ இல்லாமல் எடுத்த நீங்கள், இந்தப் படத்தில் ஏன் வைத்தீர்களோ? மற்றபடி படத்தில் வரும் டிவிஸ்ட் எல்லாமே, நிஜமாகவே ஊசிகொண்டை வளைவுகள்தான். ஆனால், அவை அனைத்துமே படத்தில் முன்பே சொல்லப்பட்டுவிட்டன. நிறைய இடங்களில் சப் டைட்டில் இல்லாவிட்டாலும், படம் நன்கு புரிந்தது.



ஹரிதாஸ் மற்றும் பரதேசி பட விமர்சனங்கள் படிக்கும்போது பார்க்க வேண்டுமென்ற ஆவல் உள்ளது. பார்ப்போம்.


யாராவது இளையராஜாவிடம் போய் குமுதத்தில் வரும் அவரது கேள்வி பதில்களை நிறுத்தச் சொல்லி சொல்லுங்களேன். நிறைய பேரிடம் அவர் இருக்கும் மரியாதையையும் இழந்து விடுவார் போல் உள்ளது. பொதுவாக ராஜா ரஹ்மான் பிரச்சினை வரும்போதெல்லாம், ராஜாவின் தலைக்கனம் பற்றி பேச்சு வரும். கமல் ரஜினி சண்டையிலும் அதே போல கமலின் பழக்க வழக்கங்கள் பற்றி வரும். அப்போது நான் சொல்வது "நமக்குத் தேவை ராஜாவின் பொருள்தான், அதாவது இசை மட்டும்தான். அதே போல கமலின் படங்கள் பற்றி மட்டும் நாம் பேசுவோம்" என்பேன் வேறு எப்படி சமாளிக்க. இருந்தாலும்,

ராஜா ரொம்பவும் அதிகமாக பேசுவது உண்மைதான். பாரதிராஜா அவரைப் பற்றி குறை சொன்னால், இவர் அதை பெருந்தன்மையாக மன்னித்திருக்கலாம். அவரைத் திட்டுவது ஊடகங்களில் வந்து விட்டது என்று இவரும் ஊடகம் வழியாகத்தானே கண்டனங்களைத் தெரிவிக்கிறார்? இசையமைப்பாளர் வாய்ப்பே எதிர்பாராமல் வந்தது என்றால் என்ன என்று எனக்கும் புரியவில்லை. இவர் வாய்ப்பே கேட்கவில்லை என்கிறாரா? ஒருவர் SPB உங்களைப் பற்றி நிறைய புகழ்கிறாரே, நீங்கள் ஏன் அவரைப் பற்றி அவ்வளவாக மேடைகளில் பேசுவது இல்லை என்றதற்கு, அவர் என் மீது வைத்துள்ள மதிப்பு அப்படி, நான் வைத்துள்ளது இப்படி என்கிறார்.

MSV அன்னக்கிளி இசையைக் கேட்டபோது நீங்கள் என்ன நினைத்தீர்கள் என்ற கேள்விக்கு (உண்மையாகவோ, பொய்யாகவோ) பதிலளித்துள்ளார். ஆனால், ராஜாவிடம் ரோஜா படத்தின் இசைக் கேட்டபோது நீங்கள் என்ன நினைத்தீர்கள் என்ற கேள்வியைக் கேட்டால் என்ன சொல்வார்? நான் அந்தக் குப்பைகளை கேட்பதில்லை என்பார். (நீ இந்தக் கேள்வியை குமுதத்திற்கு அனுப்பினாயா நாயே என்றால், இல்லை. அனுப்பினால் பிரசுரம் ஆகாது, ஆனாலும் இதுதான் பதிலாக இருக்கும்). ஒருவேளை இளைய தலைமுறை இசையமைப்பாளர்களில் உங்களுக்கு யாரைப் பிடிக்கும் என்று கேட்டால், கண்டிப்பாக யுவன் மற்றும் கார்த்திக்கைத்தான் சொல்லுவார். ஏனென்றால் ஏற்கனவே எங்கோ படித்துள்ளேன். அதில் சமீபத்தில் ரசித்த வேறு இசையமைப்பாளரின் பாடல் என்ற கேள்விக்கு, கார்த்திக் ராஜாவின் ஹிந்திப் பட பாடலைதான் சொன்னார். "ஏண்டா பக்கி, உனக்குத் தேவை ராஜாவின் இசை மட்டும்தானே, பின்ன எதுக்கு இந்த கதை" என்ற பின்னூட்டங்கள் வேண்டாம். ஏதோ சொல்லத் தோன்றியது. ஏனென்றால் எனக்கு ராஜாவைப் பிடிக்கும்.

என்னுடைய மிகப் பழைய பதிவின் சாராம்சம், ராஜா ஒரு கண்டிப்பான கணக்கு வாத்தியார். அவரிடம் யாராவது "இந்த கணக்குக்கு இந்த மாதிரியும் வழிமுறை வச்சி போடலாமா?" என்று கேட்டால், "நான் சொல்லிக் கொடுத்த மாதிரி மட்டும் பண்ணு" எனலாம். ஆனால், ரஹ்மானோ, நட்பு பாராட்டும் நண்பன், எப்படி வேண்டுமானாலும் கேட்கலாம்.

என்னதான் சொல்லுங்க, இந்த பஞ்சாயத்து ஓயாது. கடைசியாக ஒரு பெரிய சந்தேகம். முகவரி படத்தில் வரும் VMC ஹனீபாவின் பாத்திரம் இளையராஜாவா? படம் வந்தபோது யாரும் எதிர்க்கவில்லையா? பார்க்கலாம். இசை படத்திற்காக காத்திருக்கிறேன். 

2 comments:

  1. நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் உள்ளன. பெண்கள் மீதான வன்கொடுமை, இலங்கைத் தமிழர்கள் பிரச்சினை என்று. உனக்கோ, கமல் பற்றியும் இளையராஜா பற்றியும்தான் கவலை போல. முதலில் மாய உலகிலிருந்து வெளியே வர முயற்சி செய்.

    ReplyDelete

உங்களின் கீழ்/மேலான கருத்துக்கள்..