Thursday, July 10, 2008

சும்மா

பத்து நாள் முன்பு வரை பெரிய பதிவும் போடவில்லை. தமிழ் மணத்திலும் இணைக்கவில்லை. வருகை தந்தவர்களின் எண்ணிக்கையும் இருபதைத் தாண்டவில்லை. சரி என்று தசாவதாரம் பற்றி ஒரு பதிவு போட்டேன். வருகை தந்தவர்களின் எண்ணிக்கை எழுநூறை தாண்டிவிட்டது. சரிதான், நாமும் பெரிய ஆளாகி விட்டோம் என்ற மிதப்பில் தமிழ் மணத்துடன் இணைத்து விட்டேன். பதிவர்களின் ஆதரவை எதிர் பார்க்கிறேன்.


நண்பர்களுடன் வெட்டி அரட்டை அடிக்கும்போது, திடீரென வாக்குவாதங்கள் ஆரம்பித்துவிடும். நான் கமல் மற்றும் இளையராஜா ரசிகன் என்று உங்களுக்கு தெரியுமென்பதால் வாக்கு வாதம் எதைப்பற்றி என சொல்ல தேவையில்லை.

நண்பர்களை அவர்களுக்கும் திரைப்படம் கமலின் பொழுதுபோக்கிற்கு மட்டும்தான். அவர்களுக்கும் கமலின் நகைச்சுவை திரைப்படங்கள் பிடிக்கும். ஆனால், யதார்த்த திரைப்படங்களை ரசிக்க மாட்டார்கள். கேட்டால், எத்தனை முறை பார்த்தாலும் புரியவில்லை என்பார்கள். சரி. கமலின் நடிப்பில் எனக்கு மிகவும் பிடித்த காட்சி. மகாநதியில், சிறையில் வரும் காட்சி. தன்னுடைய இயலாமையை வெளிப்படுத்தும் காட்சி.


No comments:

Post a Comment

உங்களின் கீழ்/மேலான கருத்துக்கள்..