Tuesday, October 14, 2008

மீண்டு(ம்) வருகிறேன்

கொஞ்ச நாட்களுக்கு முன்பு வரை அடிக்கடி பதிவு போடவேண்டும் என்றிருந்தேன். ஆனால் விதி செய்த சதியால் அது முடியாமல் போய் விட்டது. ஆனாலும் I'm Back..

சும்மா ஏதாவது பதிவிட்டால் கணக்கில் வராதாம். எனவே நான் சுட்ட கவிதைகள் இரண்டு. இட்ட கவிதைகள் இரண்டு.

கொஞ்ச நாள் முன்பு வரை ஆனந்த விகடனில் வந்த மொக்கை கவிதைகளில், எனக்கு மிகவும் பிடித்த, மனதில் நின்ற இரண்டு கவிதைகள்.

யாரும் கேட்பதில்லை என்றாலும்
சத்தமின்றி வருவதில்லை
நீலப்படங்கள்.

வாழ்க்கையில் வெற்றி பெற இரண்டு ரகசிய வழிகள்..
1. ரகசியங்களை வெளியில் சொல்லாதீர்கள்.
2. #!$%*$^&*&^%$# (அது மட்டும் ரகசியம்)

இனி எனது (மொக்)கவிதைகள்

படுக்கையில்
கொலை
மூட்டைப்பூச்சி.

கல்லெறிந்து
உடைத்தேன் நிலவை
கிணற்றில்.

இவை இரண்டையும் மாற்றி மாற்றி சொல்லி கல்லூரியில் நான் பெரிய கவிஞன் என்று நண்பர்களிடம் டபாய்த்துக் கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் என்னை அவர்கள் உதைத்துதான் மிச்சம். இப்போது கூட பின்னூட்டத்தில் செருப்பால் அடிக்க முடியாது என்பதால்தான் நான் பதிவிட்டுள்ளேன்.

No comments:

Post a Comment

உங்களின் கீழ்/மேலான கருத்துக்கள்..